
என் தாத்தாவை போல
நானென
யார் ஒருவரும்
சொல்லக்காணோம்.
அவன்
தாத்தாவை போல
நானென
என் மகன்
சொன்னால்
அக்குறை தீரும்
சரி பாதியாய்.
என்ன செய்தால்
சொல்வானென
என்னென்னவோ
செய்து பார்க்கிறேன்.
இக்கவிதை
உட்பட.
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...