Thursday, October 22, 2009

தவம்


(picture by CC licence thanks shayan)

ன் தாத்தாவை போல
நானென
யார் ஒருவரும்
சொல்லக்காணோம்.

வன்
தாத்தாவை போல
நானென
என் மகன்
சொன்னால்
அக்குறை தீரும்
சரி பாதியாய்.

ன்ன செய்தால்
சொல்வானென
என்னென்னவோ
செய்து பார்க்கிறேன்.

க்கவிதை
உட்பட.

Sunday, October 18, 2009

குருவிக்கு எறிகிறேன் கனவை


(picture by CC license, thanks bug-a-lug)

ன்னிடம்
நாலு கனவுகள்
இருந்தது.

வற்றை
குருவிக்கு தர
தீர்மானிக்கிறேன்.

குருவியை
தேர்ந்ததில்
மூன்று காரணங்கள்
இருந்தது.

ன்று,
குருவி
கனவை தா
என
கேட்க்காது.

ரண்டு,
தராவிட்டாலும்
ஏன் என
கேட்க்காது.

மூன்று,
குருவிதான்
கனவை கொறிக்காது
லபக்கென
விழுங்கும்.

நிராசைகளை
நான்
விழுங்குவது போல.