Thursday, July 30, 2009

வேறு வேறு கண்கள்


(Picture by CC Licence, Thanks said&done)

மூன்றில் ஒரு பங்காக
சுருக்கி வரைகிறது
வாழ்ந்து கெட்ட கதையை
உயிரியல் பூங்கா
மயில்களின் கண்கள்.

பார்கிறானா இல்லையா என்பதை
மறைந்திருந்து பார்க்க
கருங்கண்ணாடிகளின்
பின்னாடி இருக்கிறதெப்போதும்
பெருத்த மார்புடைய
பெண்களின் கண்கள்.

" ல்லாருக்கீங்களா"
என்று மட்டும் கேட்கிறது
இறந்த காலங்களில்
எவ்வளோவோ
பேசிக்களைத்த அவளின்
கண்கள்.

புகைவண்டி நாதம்
தேய்ந்து மறைகிற தருணம்
விடை தந்த மனிதர்களின்
கண்களை ஊதினால்
உதிரும்
உண்மையும் அன்பும்!

"நல்லதெல்லாம் திங்க தெரியாது"
என்று முயங்கி
குழம்பில் நீந்தும் மீனின்
கண்ணெடுத்து ஊட்டுகிறாள்
குழந்தைகளற்ற
ஒரு மதியத்தில்
லதா.

ண்கள் வேறு வேறுதான்
மொழியும் தீராததுதான்

Wednesday, July 29, 2009

துக்கம்



செல்வநாயகம் செத்துப்போனது அறியாது
"செல்வா நல்லா இருக்கானா?" என்றேன்
அவனின் மனைவியிடம்.
இதில் அவளை விட
எனக்கு துக்கம்.

"ண்ணே மல்லிபூ அண்ணே" என்று
தினமும் விசாரிக்கிற ரயிலடி பூக்காரி
இன்று என்னை தவற விட்டாள் எதனாலோ
இதில் என்னைவிட
அவளுக்கு துக்கம்.

னைவியின் சேலையணிந்த
மனைவியின் தங்கையை
மனைவி என கை நீட்டிய குசும்பிற்கு
இரவெல்லாம் வெட்கி கிடந்த
துக்கம் எனக்கு.
பாவம் அதுக்கென்ன பாடோ?..

னைவியின் தங்கை முதற்கொண்டு,
ரயிலடி பூக்காரி, செல்வா மனைவி வரையில்
"எல்லா நேரமும் போலவா
எல்லா நேரமும் இருக்கும்" என்று
தெரிந்து வைத்திருந்தால் தேவலாம்தான்.

னக்கு தெரிந்ததுபோல்

(கணையாழியில் வெளியான எனது கவிதை)

Monday, July 27, 2009

மஞ்சுவிரட்டு



ஞ்சுவிரட்டுக்கு போக
ஆறேழு காரணங்கள் உண்டு.

ரமேறி நின்று மாடணைய
பார்ப்பது ஒரு காரணமென
கொள்ளலாம்.

கொல்லையில் நுழைந்தால்
சாராயம்.
வாசலில் நுழைந்தால்
கறிச்சோறு
எல்லாவீட்டிலும்.

வாடாமல்லி
பூச்சூடிய சிறுசுகளை
டிராக்டர் வண்டிகளில்
வேறெப்போதும்
காணகிடைக்காதுதானே.

லை கரும்பு தின்று
சக்கையை
மச்சான்களின் மேல் எறிய
மச்சினிகளும் வருகிறார்கள்.

ஸ் வியாபாரிகளின்
அதட்டல் மீறி
ஹாரன் அடித்து சிரிக்கிற
சிறுவர்கள்
வேறொரு ஓவியம்.

பிரியம் தவறக்கூடாதென
போகலைன்னா ஆத்தா கோவிக்கும்
காரணங்களை காட்டி
இடுப்பு குழந்தைகளோடு
வந்து சிரித்து
"இறங்கி புடி....ஆம்பளை"
எனச்சீண்டும்
கன்னக்குழி கறுப்பிகளும்
காணக்கிடைப்பதுண்டு கூடுதலாக.

போக,
வேறு சிலவும் உண்டு.

னால்...
நான்தான் சொன்னேனே
மஞ்சுவிரட்டுக்கு போக
ஆறேழு காரணங்கள்தான்
உண்டென.

Friday, July 24, 2009

வீதி அல்லது விதி


பிணைக்கப்பட்ட
சங்கிலி நாய்களுடன்
நடு வீதியில் நின்றபடி
பேசிகொண்டிருக்கிறார்கள்
அவளும் அவளும்.

ரு திமிறல்
ஒரு முனகல்
ஒரு குதியாட்டம்
ஏன்
ஒரு மொழி அசைவும் இல்லை
அதுகளிடமும்.

திர் எதிர் பாலை
பிணைக்க இயலாத சங்கிலியால்
விஷயங்களற்று
வெறிச்சோடி கிடக்கிறது
வீதி!

Thursday, July 23, 2009

சுவராஸ்யமான பதிவர்கள்


ச்சு. நன்றி ஜெஸ்வந்தி! வாங்க அனுஜன்யா போகலாம். பயணம் சுவராசியபட ஒரு நிகழ்வை கேளுங்கள்..

ரு நாள், சைக்கிளை பூட்டி சாவியை தொலைத்து விட்டேன்.

"சங்கிலிட்டே கொண்டு போகலாம்டா பத்து நிமிஷத்திலே திறந்துருவான்." என்று நண்பன் ஒருவன் சொல்ல கொண்டு போனோம்.

நண்பன் சொன்னது போல் பத்து நிமிடத்திற்கும் குறைவில் சைக்கிளை திறந்து தந்தார் சங்கிலி. போக, அடித்து செப்பனிட்ட சாவி மாதிரியான ஒரு சாவியையும் கையில் தந்தார். கூலியை கொடுத்து அத்துடன் நான் வந்திருக்கலாம்தான். சிற்பம் செய்தவரை சும்மா அனுப்ப இயலாது என்னால் என்பதால் நண்பனிடம்,

"சங்கிலி அண்ணனுக்கும் சேர்த்து மூணு டீ சொல்லுடா"என்று சொன்னேன்.

"அப்பு...நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வர்றேன்"என்று உற்சாகமாகி, மூன்று தேநீர்களை கம்பி வலையில் தொங்க செய்து கொண்டு வந்தார்.

சங்கிலி அண்ணனின் முகம் தேநீரைவிட சுவராஸ்யமாக இருந்தது. சும்மா நிற்க வேண்டாமே என்று நினைத்த நான், "எப்படிண்ணே தொழிலெல்லாம்?" என்று கேட்டேன்.

"ஏப்பூ கேக்குறீக...சின்ன வயசுல விளையாட்டா தொடங்கினது...இப்ப கஞ்சி ஊத்துதுதான் என்றாலும்...எங்க சைக்கிள் தொலைஞ்சாலும் போலீஸ் என்னை வந்து கொண்டு போயிருது.. யாரு சைக்கிளை தூக்கிட்டு வந்தா?ஆள் எப்படி இருந்தான்? என்ன சைக்கிளுன்னு போட்டு குடைஞ்சுருவாங்க...சில நேரம் அடி படுறதும் உண்டு."

"இதென்னடா வம்பா போச்சு. ஏன் அடி வாங்கணும்..கேக்கும் போதே யாருக்கு திறந்து கொடுத்தேன்னு சொல்லிற வேண்டியதுதானே"என்றேன் ஆறுதலாக.

"யாரைன்னு சொல்றதுப்பு..நம்ம தொழிலை பார்ப்பமா,ஆளையும் அடையாளத்தையும் பார்ப்பமா?பேரம் பேசி சாவி பூட்டுறாங்க. செஞ்சு கொடுத்த மறு நிமிஷம் சிட்டா பறந்துருவாங்க. உங்களை மாதிரி நின்னு டீ வாங்கி கொடுத்து பேசிக்கிட்டுருந்தா அடையாளம் தெரியும்தான்" என்றார்.

"வாஸ்த்தவம்தான்" என்றபடி என் சைக்கிளின் சகல அடையாளங்களையும் கூர்ந்து கவனித்து, "நல்ல வேலை நம்ம சைக்கிள்தான்" என்று நண்பனிடம் சொன்னேன்.

சங்கிலி அண்ணனும் சிரித்தார்!

வாஸ்தவத்தில், சங்கிலி அண்ணனுக்கும் எனக்கும் மெல்லிய ஒன்றுணர்வு இருக்கு அனு. இந்த பதிவுலகம் எனக்கு ரொம்ப புதுசு. பின்னூட்டம் வழியாக, அவர்களின் வீடடைகிறேன், அவர்களின் பின்னூட்டம் வழியாக அவரவர் வீடடைகிறேன். சங்கிலி அண்ணன் சொன்னது போல், "உங்களை மாதிரி நின்னு..டீ வாங்கி கொடுத்து..பேசிக்கிட்டு இருந்தால் அடையாளம் தெரியலாம்தான்" என இங்கு நானும் சொல்ல விரும்புகிறேன் அனு.

ஜெஸ்வந்தி எனக்கு தந்திருக்கும் விருதிற்கும் நீங்கள் தந்திருக்கும் விருதிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அது, பதிவுலக நண்பரை தேர்வு செய்வது. அதில் நிறைய சுதந்திரம் உண்டு. இது சுவராசிய பதிவினர் விருது. உண்மையில் சுவராசிய பதிவரை தேர்வு செய்ய சற்றும் அருகதையற்றவன் அனு நான். ஏனெனில், கடந்த பதினைந்து வருடங்களாக... நான் மிகவும் நேசித்த, நேசிக்கும் இந்த இலக்கிய உலகின் முன் வாசல் பின் வாசல் அறிய இயலாமல் போய் விட்டது. நான் ஏற்கனவே சொன்னது போல், பின்னூட்டம் வழியாக தளம் தளமாக போய் வாசித்ததில் நான் ஒன்றுமே இல்லை என்றே உணர்கிறேன். அவ்வளவு பெரிய உலகம் விரிந்து கிடக்கிறது. நுழந்து வெளிவர வெகு காலம் பிடிக்கும். மிகவும் விரும்பிய தளங்களில் கூட வெறும் ஒரு கவிதையை வாசித்த நேரமின்மையும் என்னிடம் இருக்கிறது. இப்படி ஒரு சூழலில்... இந்த சொற்ப காலங்களில், நான் என்ன தெரிந்தனோ அது குறித்தும், அதன் சுவராசியம் குறித்தும் குறிப்பிட என்னால் இயலும்... இதை எல்லாம் ஏற்க நீங்கள் தயாரெனில்,...

வர்களிடம் அவ்வளவு கொட்டி கிடக்கிறது...

அவர்கள்...

ன்னும் அனேகர் உளர். விதிகள் என்னை அனுமதிக்க காணோம். மற்றபடி நிறைய அன்பும் நன்றியும் அனு.

ல்லோருக்கும் அன்பு நிறைய!
பா. ராஜாராம்

Monday, July 20, 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது



ண்பர், ரங்கன் தொடங்கி வைத்த இந்த, "best friend" விருதை, தோழி ஜெஸ்வந்தி, அவர்களின் ஒன்பது நண்பர்களில் ஒருவனாக என்னையும் தெரிவு செய்தார்கள். இந்த பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட ஒன்னரை மாத காலம் ஆகிறது. பதினைந்து வருடம் முன்பாக பித்து பிடித்து அலைந்த அந்த இலக்கிய வாசனையை மீண்டும் உணர்கிறேன். எழுத்தனுபவம் காட்டிலும் வாசிப்பனுபவம் மிகுந்த சுகம் கொள்ள செய்கிறதுதான். மீண்டும் எழுத வந்த பிறகு, எழுதியதை விட வாசித்தது அதிகம் என கொள்ளலாம். இப்படியான ஒரு சூழலில், வாசிப்பனுபவம் கொண்டு நல்ல நண்பர்களை தேர்வு செய்வதில் (அநேகம் பேர் இருப்பதால்) மிக குழப்பமே...ஆயினும், நேர் செய்யத்தானே வேணும். அதில்..

அப்பாவின் இளைய சகோதரர். நல்ல வாசிப்பனுபவமும், மிகுந்த அன்பாளரும். அப்பாவின் அன்பை அப்படியே தருபவர். ஆயினும் நண்பர்!சமீபமாக எழுத வந்து, எழுத்தில் வியப்பு ஏற்படுத்தியவர். ஆக,அவரிடமிருந்து தொடங்குவதே என் best frind பயணம் நியாமாகிறது.

அறிமுக காலம் தொட்டே நல்ல இலக்கிய அறிவு கொண்டவன். அவன் தளம் வேறு என் தளம் வேறு. அவனை அவன் நேசிப்பது போலவே என்னையும் என் எழுத்தையும் நேசிப்பவன். எழுத்தையும் நட்பையும் குழப்பிகொல்லாதவன். எழுத்தை கடந்த அன்பு பிரதானம்தானே எப்பவும்.

தளம் தொடங்கிய பிறகு அறிமுகமான நண்பர்களில் ஒருவர். சுந்தராவை போலவே தளம் வேறு வேறு. ஆயினும் வாசிப்பனுபவம் சொக்குகிறது. என் தளத்திற்கு இறங்கி வந்து, எனக்கு புரியும் படியான பின்னூட்ட கவிதைகளில் அன்பு தெறிக்கும்!

மீண்டும் எழுத வந்த பிறகு, சுந்தராவின் மூலம் கிடைத்த, நல்ல நண்பர்கள் நிறைய!அதில், முக்கியமானவர் அனு (எ)அனுஜன்யா. எழுத்து எப்படியோ அப்படியே நானும் என உணர தருகிற நண்பர்!

மனிதர்களை படிக்கவும், படிப்பின் மூலமாக உரிமை கொண்டழைக்கவும் எழுத்து ஆக சிறந்த ஒன்று. அதில் இவர் எனக்கு வாசு அண்ணா ஆனார். அப்படி அவரும்.

முகம் தெரியாது.ஆனாலும் எழுத்து, கூட பிறந்தவனை போல காட்டித்தரும். இப்படி உணரும் அடிநாதம் எதுவென அறிய இயலவில்லை. அறியவும் வேண்டாம்தான்.அப்படி நந்தா.

இனம் புரியாத எளிமையான எழுத்து நடை இவரை நண்பராக்குகிறது. ஆக, அ.மு.சையதும்!

கவிதை வாசிக்க எப்போ நுழைந்தாலும், "ராஸ்கல்..உக்காரு..எங்கே போற" என்ற சிநேகம் ததும்பும் எழுத்து செயலர். அவரும் கூட!

மன இறுக்கம் தளர்த்தக்கூடிய,தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்து ஜெகனை நண்பராக்கும் யாருக்கும்.பிறகு நான் மட்டும் விடுவானேன்?...

விலக முடியாத வாசிப்பனுபவம் ரௌவ்த்ரனின் கவிதைகள். இங்குதான் சவுதியில் இருக்கிறார். எந்த ஒரு விசையாவது நகர்த்தி என்னையும் இவரையும் இணைத்தால், குலசாமிக்கு பொங்கல் கூட வைக்கலாம்தான். அவ்வளவு ஈர்க்கிறார் எழுத்தில்!

எந்த தளத்திற்கு போனாலும் ரசிகையின் பின்னூட்டம் காண கிடைக்கிறது. ஓடி..ஓடி..எழுதுபவர்களை உற்சாக படுத்த ஒரு மனசு வேணும். அப்படி... இந்த நமுட்டு சிரிப்பு ரசிகை!


போதும்தான். எல்லோரையும் நானே எடுத்து கொண்டால்...கொல்லங்குடி ஆத்தாளே காசு வெட்டும்!

*** ***

நெரிகிற நகர பேருந்து கூட்டத்தில் முண்டி ஏற மனசு அனுமதிப்பதில்லை.."சரி..நாலு கிலோ மீட்டர்தானே...நடக்கலாம்" என நடக்க தொடங்கையில்..."மாப்ள பத்திரிக்கை வைக்க வீட்டுக்குத்தான் போய்கிட்டுருந்தேன்..ஏறு..போகலாம்"என்று கார் கதவு திறந்து சிரிக்கிற நண்பர்கள் போல்...ஒரு சேர தனி,தனி காரில் அழைக்கிறார்கள், ஜெஸ்வந்தியும், அனுஜன்யாவும்.

"ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்..."என சிரித்து முதல் காரில் ஏறியிருக்கிறேன். "ரெண்டு கிலோ மீட்டர் வந்ததும் இறக்கி விடுங்கள் அனுஜன்யாவுடனும் பயணிக்க வேணும்".

ல்லோருக்கும் அன்பு நிறைய!
பா. ராஜாராம்

Friday, July 17, 2009

காலத்தின் வாசனை

"டேய்...மாப்ள..."

குரல் கேட்டு அதிர்ந்து திரும்பினேன். கையில் கிளாசுடனும், முனை கிள்ள தயாராய் இருந்த தண்ணி பாக்கெட்டுடனும், கண்களில் தளும்பிய நீருடனும், சொல்லொண்ணா புன்னகையுடனும் நின்று கொண்டிருந்தான் அவன். மனசிற்கு பிடித்த எவ்வளோவோ இடங்களில் இந்த திருப்பதி ஓய்ன்சும் ஒன்று. தற்சமயம், டாஸ்மாக் கடைகள் என்று மாறி இருந்தாலும், பார்களை எல்லாம் பழைய அடையாளங்களுடன்தான் அழைக்க நேரிடுகிறது உள்ளூர் மனசுகளுக்கு!பிடிக்கிற இடங்களுக்கும், மனிதர்களுக்கும் காரணம் சொல்ல இயலாது. எது நகர்த்தி நம்மை, மனிதர்களிடமும், இடங்களிடமும் பொருத்துகிறது என அறுதியிட முடிவதில்லைதான்.

அப்படியான ஒரு இடத்தில் இருந்து, பழைய வாசனை வீசும் ஒரு குரலும், முகமும், புன்னகையும்!...உள்ளிருந்த சாராயமா, வழக்கம் போலான என் ஞாபக குறைவா தெரியவில்லை. பார்த்தது போல் இருக்கிறது. ஆளை பிடிபடவில்லை. தயாரற்ற ஒரு நிலையில், அவன் தந்தது மாதிரியான ஒரு சிரிப்பை தர இயலாவிட்டாலும் சிரித்து,

"ஹலோ" என்றேன்... வேறு தோணாது.

"ஹலோவா.. வக்காளி மறந்திட்டில்ல" என்றான் என் நெஞ்சை தள்ளி.

தூக்கிவாரிபோட்டது. சற்று கூசினாலும், கயிறு வீசி சர சரவென மனசில் இறங்குகிற மனிதர்களை என்ன செய்துவிட முடியும், தவிப்போடும், இனி காட்ட இயலாத சூழலோடும், நானும்,

"டேய்...மாப்ள... அடையாளமே தெரியலைடா" என்று மார்போடு அணைத்து தோராயமாய் வலைக்குள் நுழைந்தேன். "வக்காளி...மறந்துட்டியோன்னு பயந்துட்டேன் மாப்ள..அப்பா இறந்ததுக்கு வந்திருந்தேண்டா. கல்யாணியும் வந்திருந்தாள். நீ சவுதியில் இருந்து கிளம்பிட்ட, இந்தா வர்ற, அந்தா வர்றன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. புள்ளைகள் ஸ்கூல்ல இருந்து வந்துருங்கன்னு சொல்லுச்சு. சரி அப்ப நீ கிளம்புன்னு பஸ் ஏத்தி அனுப்பிவிட்டேன். நல்ல கூட்டம் மாப்ள. காடு வரைக்கும் கூட்டத்தோடு வந்துட்டு, உன் கையை கூட பிடிக்க முடியாமல் போயிட்டேன். ரொம்ப பிடிச்சவுங்க இறப்புக்கு வர்ற மாதிரி கொடுமையான விஷயம் இல்லைடா மாப்ள"

கடவுளே!..என்றிருந்தாலும் காட்டிகொள்ளாமல்.."எத்தனை குழந்தைகள்டா மாப்ள?" என்றேன்.

"ரெண்டு பொம்பளை பிள்ளைகள்டா. மாமனார் பலசரக்கு கடையில்தான் நிக்கிறேன். மரியாதை குறைவுதான். வேறு போக்கிடம் இல்லை மாப்ள".

இவன் முகத்திலேயே குரலையும் வைத்திருந்தான். குரலுக்கேற்ப முகம் மாறுவது அவ்வளவு அழகாய் இருந்தது.

"பரமக்குடி வந்த வண்டியில, அப்பா காண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் பார்த்தேன். இந்தா, இந்த திருப்பதி ஓயின்சுலதான் அப்பாவை கடைசியாக பார்த்தது. ஏழெட்டு வருஷம் இருக்கும், ஆனாலும், முகம் மறக்கலை. டீ குடிச்சுட்டு வர்றேன்னு மாமனார்ட்ட சொல்லிட்டு, வீட்டுக்கு வந்து, புறப்புடு புள்ளைன்னு கல்யாணியையும் கூட்டிட்டு வந்தேன். சரி அதைவிடுசவுதி வாழ்க்கைல்லாம் எப்படிடா போகுது?”

"ம்...போகுது மாப்ள..."

ஏதோ தீர்மாணித்தவன் போல,"மாப்ள...எதுல வந்த?"என்று கேட்டான்.

"TVS-50 இருக்குடா"

"சரி அப்ப கட்டிங்கோட நிறுத்து. காலேஜ் கிரவுண்டு போய் மீதியை பேசுவோம். இரு, இந்த வாடகை சைக்கிளை விட்டுட்டு வந்திர்றேன்." என்று என்னை யோசிக்க விடாது போனான்.

எதிர்பாரா பொந்திற்குள் இருந்து, இவன் புறப்பட்டு வந்ததுபோல், அப்பா இறப்பிற்கு பிறகு, இழுத்து செல்லும் எந்த நதிக்குள்ளும் முகம் மேலே மலர்த்தியபடி நீரோட்டத்தோடு போய் கொண்டிருக்க எனக்கும் பிடித்திருந்தது. கல்லூரி மைதானம் வரையில் என்னென்னவோ பேசிக்கொண்டு வந்தான்.மைதானம் வந்ததும்,

"அந்த உதிய மரத்துல வண்டியை நிறுத்து" என்றான்.

விரும்பியோ,விரும்பாமலோ பிடித்த முதலாளி ஆகி இருந்தான் எனக்கு. வெயில் வேறு. தீபாவளி மதியத்தில் அருகில் தூங்குகிற மனைவி போல் இணக்கமாக இருந்தது. எவ்வளவு காலமாச்சு! இந்த மைதானத்தில் என் கால் படாத இடமே இல்லை என நான் யோசித்து கொண்டிருக்கும் போதே,

"பார்த்தியா, என்ன வாசைனைன்னு.... இந்த உதிய மர வாசனைக்காகவே, மாசம் ஒரு தடவையாவது இங்கு வந்துருவேன். பஸ் ஸ்டாண்டுல இறங்கி, வேலவன்னுல சைக்கிள் எடுத்து, திருப்பதி ஓயின்சுல ஒரு கட்டிங்கை போட்டுட்டு நேர இந்த உதிய மரம்தான்"

பேச்சு பேச்சாக இருந்தாலும், கை, மீதி குவளையை திறக்கவும், நீரை சரிக்கவும், ஊறுகாய், முறுக்கு பொட்டலங்களை பிரிக்கவுமாக இருந்தது.

"மீதி கட்டிங்கை இங்க போட்டேன்னா...பூரணமாயுரும்...இங்கதான் நீ ஓடிட்டு இருப்ப...அப்பா வாடகை சைக்கிளில் ஸ்டாண்டு போட்டு கேரியரில் உக்கார்ந்து இருப்பார்...உன் அப்பாதான்னு ரொம்ப நாள் வரையில் தெரியாதுடா. சுந்தர்தான் சொன்னான், ராஜா அப்பாடா அது, அவன் ப்ராக்டிஸ் செய்றதை பார்த்துக்கிட்டிருப்பார்ன்னு. வாடகை சைக்கிளில் உக்கார்ந்திருப்பவர்தானேன்னு, நானாதான் பேச்சு கொடுத்தேன். ராஜா கிளாஸ்மேட் தான் நானுமுன்னு...கை எடுத்து கும்பிட்டார்....ஆடி போயிட்டேன் அப்படியே. ஏழரை மணிக்குத்தான் பஸ்ஸு. அது வரையில் இப்படி உட்கார்ந்திருப்பேன் என்று தொடங்குச்சு. தினம் வருவாரு..தினம் பேசுவாரு... எனக்கும் அவருக்கும் பேச என்ன இருக்குண்ணே தோணாது. எனக்கும் ஏழரை வரையில் நேரம் போகணும்,அவருக்கும் உன்னை பார்த்துகிட்டே பேச ஒரு துணை மாதிரி இருக்கும்".

எனக்கு அரவம் தட்ட தொடங்கியது. கடைசி பெஞ்சில் சுந்தர் அருகில் உட்காந்திருப்பான். மனசின் ஆழத்தில் கிடந்த இவன் பெயரை மேலெழுப்பி கொண்டு வருவதில் தோற்று கொண்டே இருந்தேன்.

"நீ, sn, ஸ்ரீகண்டன் எல்லாம் ஒரு செட்டு. என்னோடல்லாம் அவ்வளவா பேச மாட்டீங்க. சுந்தர் மட்டும் உங்க செட்லயும் இருப்பான், என் செட்லயும் இருப்பான். என்ன அருமையான காலங்கள்டா மாப்ள. எவ்வளவு சந்தோசம். அம்மா சேலை வாசனை மாதிரி, இந்த உதிய மரத்து வாசனையும் மனசோடையே தங்கிப்போச்சு. தாயளி...சுந்தர் செத்ததை கூட யாரும் சொல்லலைய்டா நம்ம முத்து கிருஷ்ணன், இப்ப ரபீக் ராஜா லாரில டிரைவரா ஓட்றான்....பரமகுடியில எதார்த்தமா பார்த்தேன்....பத்து பதினஞ்சு நாள் ஆச்சு மாப்ளன்னான்....வீட்டுக்கு போய், கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு.....சுந்தர் கிளாஸ்மேட்... இப்பதான் தெரியுமுன்னு சொல்லிட்டு வந்தேன்."

காலத்தை தூக்கி மடியில் வைத்து கொண்டு படம், படமாக விரித்து காட்டி கொண்டிருந்தான். பரமக்குடியான் என்று இவனை கூப்பிடுவது வரையில் என் ஞாபகம் வலுபெற்று இருந்தது. இப்படியே இவன் போய் கொண்டிருந்தால் போதும். இந்த முக்கு போய் அந்த முக்கு திரும்புவதற்குள் இவன் பெயரை மீட்டெடுத்துவிட முடியும். உள்ளிருந்த சாராயம் பூ மாதிரி இளக்கிக்கொண்டிருந்தது ரெண்டு பேரையும்.

"மாப்ள...இரு...சரக்கு பத்தலை...வாங்கிட்டு வந்துரட்டுமா?" என்று கேட்டேன். "நானும் வரவாடா...?" என்றான் உதிய மரத்தை விட்டு வர மனசில்லாமல்.

"இல்லை மாப்ள இரு...ரெண்டு நிமிஷம்..." என்றபடி வண்டியை கிளப்பினேன். திரும்பி வருவதற்குள் இவன் பெயரை பிடித்து விட எனக்கும் தனிமை தேவையாக இருந்தது.

விரட்டிப்போகிற வண்ணத்து பூச்சி, விரல்களில் வண்ணத்தை ஈஷி, பூ பூவாய் நகர்ந்து கொண்டிருப்பது போல் இவனின் பெயரும் தட்டுப்பட்டு தட்டுப்பட்டு விட்டுப்போயிற்று. பேர் அவஸ்தையோடு திரும்பி வந்தேன். உதிய மரத்து வேரில் சாய்ந்தபடி, நெளிந்த சிரிப்பொன்றை தூரத்திலேயே வீசினான்.

"என்னடா பூரணமாயிட்ட போல" என்று சிரித்து அருகிலேயே உட்கார்ந்தேன்.

"போடு மாப்ள...எப்பவும் ஒரு குவாட்ட்டார்தான் நமக்கு கணக்கு...அதுவும் இங்கு வரும் போது மட்டும்தான்" என்றான்.

"அப்பாவை கடைசியில் திருப்பதி ஒயின்ஸில் பார்த்ததாக சொன்னியேடா" என்றேன், இவனை மேலும் நகர்த்த.

”ஆமாடா மாப்ள...ஏழெட்டு வருஷம் இருக்கும்...அப்பா மாதிரி ஆட்களை பார்ல பாக்கறதுக்கு கூச்சம். ஒளியவும் மனசில்லை, தண்ணிய வாங்கிட்டு அவர் எதிரிலேயே உட்கார்ந்தேன்." இங்கு அவன் எதிரில் இருந்த குவளையவும் முழுக்க ஒட்டுமொத்தமாக சரித்தான்...வார்த்தைகள் குழறி குழறி வர தொடங்கியது.

"எதில விட்டேன்?"

"அப்பா எதிரிலேயே உட்கார்ந்தாய்?"

"என்னை அடையாளம் தெரியலை அவருக்கு. அப்பான்னு கூப்பிட கூச்சம். ஐயா பாதி அடிக்கிறீங்கலான்னு கேட்டேன். அப்பா அப்படியேதான் இருந்தார். அதே கும்பிடு, வேணாம்ப்பு...சாப்பிடுங்கன்னாரு...ஒரு ரவுண்டு போனாதான் தைரியம் வந்துரும்ல்ல நமக்கு. அப்பா...நினைவிருக்கா என்னைன்னு கேட்டேன். இல்லேயப்பூ...வயசாயிருச்சுல்லன்னாரு. இன்னாருன்னு சொல்லி, உதிய மரத்தை சொன்னதும். நல்லா ஞாபகம் இருக்கு மாப்ள...ஆத்தீ..ஆத்தீ...ன்னு கையை பிடிச்சுகிட்டாரு. அப்ப நீ அவர் முகத்தை பார்த்திருக்கணும்டா. வேற எதுவுமே சொல்லலே திருப்பி திருப்பி அந்த ஆத்தீ ஆத்தீ தான். எனக்கு கண்ணுல்லாம் நெறஞ்சு போச்சு".

எனக்கும் கண்கள் நிறைந்து. அவன் அறியாமல் துடைத்து கொண்டேன். அசங்கினால் சம்பவம் உடை படுமோ என பயமாக இருந்தது.

"பேரனைப்போய் ஸ்கூல்ல பார்த்துட்டு வரும்போது அப்படியே கொஞ்சம் சாப்புட்டு போகலாமுன்னு வந்தேன்னாரு. பய சவுதியில இருக்கான் தெரியும்லப்பான்னு கேட்டாரு. தெரியும்பா..கேள்விபட்டேன்னு சொன்னேன். எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கீங்கண்ணு கேட்டேன். இல்லைப்பா, நானும் அம்மாவும், ஊருல கிராமத்துல இருக்கோம், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பக்கமுன்னு தம்பி டவுனுக்கு வந்துட்டான்...எங்க போய்ட்டான்...ரெண்டு கிலோ மீட்டர்...இந்தா ரெண்டு மிதியில வந்து பேரனை பார்த்துட்டேன். இந்த பய தான் காசுக்காக அம்புட்டு தூரத்துல கிடக்கான். பொம்பளை புள்ளையை வச்சுருக்கான், கரையேத்தட்டும், அப்புறம் எல்லாம் சரியா வந்துரும்ப்பான்னு பேசிக்கிட்டே வாடகை சைக்கிளை எடுத்தாரு...மாப்ள... அதே வசந்தி வாடகை சைக்கிள்.”

“நீங்கல்லாம் என்னத்துக்குடா வெளிநாடு போறீங்க? எல்லா மயித்தையும் தொலைக்கிறதுக்கா..." என்று சற்றும் எதிர் பாராமல் வழியும் கண்ணீரை துடைத்த படியே....மூசு....மூசென்று மூச்சுவிட்டான்.

"மூணு வருசமா பரமகுடியான், பரமகுடியான்னு கூப்பிட்டு, கூப்பிட்டே....மூணு வருஷமும் என் பேரே எனக்கு மறந்து போச்சு...நீங்கல்லாம் என்னங்கடா மனுஷங்க... அப்பா, சுந்தர், கேன்டீன் ஜலாலுதீன் பாய் இந்த மூணு பேரும்தான் மனசு நெறஞ்சு பேர் சொல்லி கூப்பிடறது, போங்கடா நீங்களும் உங்க பரமக்குடியானும்.”

வார்த்தை தடித்திருந்தாலும் பிடித்திருந்தது. எழுந்து தடுமாறி. மண்ணை தட்டி நடக்க தொடங்கினான். நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணி "டேய்...வண்டியில ஏறுடா போகலாம்" என்றதுக்கு.

"போ...போ...போய்கிட்டே இரு..." நிமிடத்தில் காட்சி மாறிப்போனது. அழுகையும் பீரிடலுமாக கெஞ்ச கெஞ்ச, கேட்காமல் மெயின் ரோடு வந்து விட்டான். எனக்கு வண்டியை உருட்ட மூச்சு வாங்கியது.

"டேய்...வண்டியில ஏறு மாப்ள, பஸ் ஏத்தி விடுறேன்..."


"போ...மாப்ள...போ...போய்கிட்டே இரு..." என்று சொல்லி கொண்டே சற்றும் எதிர்பாராமல். ரெண்டு கைகளையும் விரித்து. எதிரில் வந்த பேருந்தை மறித்து, நின்ற பேருந்தில் ஏறியும் விட்டான்.

செய்ய ஏதுமின்றி,ஓட்டுனரை, "மன்னியுங்கள்" என்பதாக கை கூப்பினேன். அவரும் அப்பா மாதிரியான மனிதராக இருக்க வேணும். "பரவாயில்லை....நான் பார்த்துக்கிறேன்" என்று சைகையில் சிரித்தார். வண்டியை ஓரமாக சரித்து, ஓட்டுனர் ஜன்னலோரமாக வந்து, "பரமக்குடி வண்டியில் அவனை ஏற்றி விட வேணும்"என்று கேட்டு கொண்டேன்.

"தெரியும்..சண்முக அண்ணாச்சி மருமகன்தானே" என்று சிரித்தார்.

குனிந்து ஜன்னல் வழியாக இவனை தேடியபோது, கையை மேலே தூக்கி, "போ...போ..போய் கிட்டே இரு..." என்றான் உக்கிரம் மாறாமல்.

வீடு வந்து என் தடுமாற்றம் உணர்ந்த மகன், வண்டியை வாங்கி ஸ்டாண்டு போட்டு தந்தான். "வரும்போதே....தள்ளாடித்தான் வர்றது...சவுதியில் கிடைக்கலைங்கிறதுக்காக இப்படியா....வீடே தண்ணி நாத்தம்....போய் குளிச்சுட்டு வாங்க" என்று கதவு திறந்து தந்தாள் மனைவி.

குளிப்பதற்கு முன்பாக என் பீரோ திறந்து, துணிகளுக்கு அடியில் நியூஸ் பேப்பர் சுற்றியிருந்த அந்த புகை படம் எடுத்தேன். முகம் முகமாக இவனை தேடினேன்...இருந்தான்...அதே விரிந்த புன்னகையுடன்! மன்னர் துரைசிங்கம் நினைவு கலை கல்லூரி மூன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவர்கள் இடமிருந்து வலமாக.....பெயர் பெயராக வாசித்து வந்ததில்...

"p. நடராஜன்!"

"டேய்.... மாப்ள...நடராஜா..."

என்று நான் பெயரை கூப்பிடுவதற்க்கும்...வெளிச்சத்திற்காக மகள் வந்து ஜன்னலை திறப்பதற்கும் சரியாக இருந்தது. மழை நின்ற பிறகு மரக்கிளைகளை உலுக்கி நனைவது போல் உதியமரத்து வாசனை சரம் சரமாக இறங்க தொடங்கியது!

Tuesday, July 14, 2009

விருப்பமான வரி...



குடிவரி கேட்டு
நீள் செவ்வக நோட்டேந்தி
நாலு பேர் வருவதுண்டு
ஊர் கோவில்
திருவிழாவிற்கு.

சிறகு முளைத்த
அதே
நீள் செவ்வக
கடிதமொன்று
நான்கு முனை
மஞ்சள் அணிந்து
கடல் கடந்த களைப்போடு
கை அடைகிறது
வருடா வருடம்.

வீடு விட்டு
வீடு மாறி
நாடு விட்டு
நாடு போனாலும்
விட்டு விடுவாளா
வீரமாகாளி?....

Saturday, July 11, 2009

பா.ராஜாராம் கவிதைகள் (2)


ரு சில மரங்கள்
மனிதர்களை போலவே இருக்கிறது.
ஒரு சில மனிதர்கள்
மரங்களை போலவே இருக்கிறார்கள்.
ஒரு சில மரங்கள்
இருக்கிறார்கள் எனவும்
ஒரு சில மனிதர்கள்
இருக்கிறது எனவும்
இருக்கும்படிதான்
இருந்தும் விடுகிறது.

**************

முடிவடையாத
வாசலில் இருந்து
பூசணி பூ
சொல்கிறது...
மார்கழி மாதத்தையும்
பூரணம் பெற்ற
ஒரு கோலத்தையும்.

**************

டைத்தாய்.
செப்பனிட்டாய்.
செப்பனிட தெரிந்ததால்
உடைத்து விடுவாய்.
செப்பனிட விரும்பியும்
உடைக்க தொடங்குவாய்.
செப்பனிட்டு செப்பனிட்டு
உடைந்து விடுவாய்.

**************

சிட்டிகை காற்று
சிட்டிகை நீர்
சிட்டிகை ஜுவாலை
ஆகாயம் நிலம்
அற்று போகும்படி
தந்து பெருக்குகிறது
தந்த முத்தம்.

**************

Tuesday, July 7, 2009

தாள்களுக்குள் வைத்த மயிலிறகுகள்.



சோமு மாமா
வாங்கி தந்த
மென் ஊதா
மர்பி ரேடியோ
சுமதி அக்காவுடையது.

ள்ளதிலேயே பெரிய
உணவருந்தும் பூந்தட்டு
புனிதா அக்கா
வைத்திருப்பாள்.

சாயம் போயும்
விடாமல் வைத்திருந்தாள்
தேவி
கத்தரி பூ கலர்
தாவணியை.

யில் கழுத்து
நிறமொப்பிய
தலையணையும்
மஞ்சள் போர்வையும்
இந்திராவுக்கானது.

வரவர் பொருள்
அவரவர் தொட மட்டுமே.

த்தான்கள் வந்து
கொண்டு சென்றார்கள்
அக்கா தங்கைகளை.

போட்டது போட்டபடி போன
அக்கா தங்கைகள்
பிரிய பொருட்களையும்
போட்டே போனார்கள்.

வீடெடுத்து வீதியில் வீச
வீட்டிற்கு இயலாது.
வீட்டிலிருந்த மனிதர்களும்
வீடு போலவே.

யினும்...
வீட்டிலில்லை எது ஒன்றும்...

பிரியமான எதுவும்
அரவமின்றி தொலையும் போல.

பொதுவாய்!...

(தினமணி நாளிதழில் வெளியான எனது கவிதை)

Saturday, July 4, 2009

ஜன்னல் வைத்த வீடு



(கணையாழியில் வெளியான எனது கவிதை)

ங்கே இங்கே கடன் வாங்கி
அப்பா கட்டினார் வீடொன்று.
செங்கல் சாந்து கடனோடு
வளர்ந்து நின்ற பூதமது.

ண்ணா இட்ட கட்டளைக்கு
சுளித்து சிரித்தது மாடியறை.

"வனுக்கு மட்டும் ஆசை இருக்காதா?"
தவழ தொடங்கிய தம்பிக்காக
அம்மா வந்தாள் அப்பாவிடம்.

"டுத்தாத்துக்கு போறவளுக்கு
என்ன இருக்கு நம் வீட்டில்"
அப்பா அம்மா முதற்கொண்டு
அண்ணா வரையில் சொன்னாலும்...

ப்பா கட்டிய பூதத்தில்
அழகே அழகு ஒன்றுதான்...

க்ரகாரம் முழுக்க தெரியும்
தெருவை பார்த்த ஜன்னல் அது!

Wednesday, July 1, 2009

பிராய்லர் இல்லம்



கேள்விகளற்று
ஒருவர் மேல் ஒருவராககூட
நெருக்கியடித்து
அமர்ந்து கொள்கிறோம்.

ம்பி வலையிடை விரைகிற
உலகம் பார்த்து
வியந்து கொள்கிறோம்.

ன்னதென்று
அறுதியிட இயலாத
பதட்டம் இழையோடியபடி
அறிந்தவர், அறியாதவர்
எல்லோருடனும்
பேச்சிறைத்து கொள்கிறோம்.

தவு திறந்து
கை
உள்நீண்டு
வரும்போதெல்லாம்
கை
இரைக்கானது
என்றெண்ணி
அடித்து, புரண்டு
விழுந்து கொள்கிறோம்.

நின்று, நிதானித்து
தேடுகையில்
யாரோ
குறைந்ததுபோல்
இருக்கும்.

யாரை
எங்கென்று
எப்படி
தேட?...

றக்க
புதிதொன்று
பேச கிடைக்கும்.
மென் சிறகுரசும்
கதகதப்பு
கூடலுடன்.

செத்த நேரத்திற்கு.