Tuesday, December 1, 2009

ஜீபூம்பா


(picture by CC licence, thanks Wrote )

ப்பா அம்மா
நடுவில் படுத்தே
கதை கேட்க்கிறான்.

வனுக்கு பிடிக்காத
மந்திரவாதி கதை.

ழு ஏழுகடல்,ஏழுமலை தாண்டி
கிளிக்குஞ்சில் உயிர் இருக்கும் மந்திரவாதி
பனைமரத்தளவு கை கொண்டு
இளவரசியை அபகரிக்கிறான்.

சிக்கு இவனைப் போன்ற
குழந்தைகளை உண்கிறான்.

ப்பா மாதிரி நல்லவர்களை
துவம்சம் செய்கிறான்.

வ்வளவையும் கூட
பொறுக்கலாம்

விடியும்போது இவனறியாது
நகர்த்தியும்வேறு தொலைக்கிறான்.

ம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.

குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

Monday, November 30, 2009

புரிதல் காலம்


(Picture by CC licence, thanks Paromita)

ல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.
**
போக போறது
புறப்பட்டது எல்லாம்
சொல்லக் காணோம்.
போகும்போது சிரித்தது
புரியக் காணோம்.
**
குழந்தையோடு பேசி கொண்டே
ஜன்னல் திறந்தாள்.
போய் கொண்டிருக்கும்
பூச்சாண்டி புரிந்ததும்
மூடிக்கொண்டாள்.