
(picture by CC licence, thanks Wrote )
அப்பா அம்மா
நடுவில் படுத்தே
கதை கேட்க்கிறான்.
இவனுக்கு பிடிக்காத
மந்திரவாதி கதை.
ஏழு ஏழுகடல்,ஏழுமலை தாண்டி
கிளிக்குஞ்சில் உயிர் இருக்கும் மந்திரவாதி
பனைமரத்தளவு கை கொண்டு
இளவரசியை அபகரிக்கிறான்.
பசிக்கு இவனைப் போன்ற
குழந்தைகளை உண்கிறான்.
அப்பா மாதிரி நல்லவர்களை
துவம்சம் செய்கிறான்.
இவ்வளவையும் கூட
பொறுக்கலாம்
விடியும்போது இவனறியாது
நகர்த்தியும்வேறு தொலைக்கிறான்.
அம்மா இடத்தில் இவனையும்
இவன் இடத்தில் அம்மாவையும்.
குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

