Wednesday, September 30, 2009

ஒன்றிரண்டாக இவள்


(picture by CC license, Thanks Javier )

ஒன்று:
அழைத்து போக
வந்தார்கள்.
ஆடிக்கு.

அழுதாள்
இவள்.

அழுது கொண்டே
இருப்பவளின்
ஆகச்சிறந்த அழுகை
அது.

இரண்டு:
ஓட்டிடை
எட்டிப்பார்த்து
கீச் கீச் என்கிறது
அணில் குட்டி.

" நீ வேறையா?.."
என்றாள் இவள்.
என் மேல் உள்ள
எரிச்சலில்.

தருணம்
தளர்த்தித்தந்தாள்
அணில் குட்டி.

மூன்று:
"திறந்து
கிடக்கு முண்டம்"
என மூடிக்கொண்டாள்
இவள்.

கதவு மூட
எழுகிறேன்
கனவு கலைகிறது.

Monday, September 28, 2009

தொடர்பதிவு 3: கடவுள், பணம், அழகு, காதல்

து நம்ம ஜெஸ்வந்தி மேடம் பார்த்த வேலை. நாலும் நம்ம கூடத்தான் இருக்கு. இதை பத்தி எழுதுவதற்காக யோசிக்கிற தருணம் இப்பவே வாய்க்குது... எழுதுவதற்கு இதில் ஒண்ணுமே இல்லை போல ரொம்ப வெறிச்சோடி வருது. எப்பவும் நாம் நம்மையே நினைத்து கொண்டிருப்பதில்லை, அது போல. "ராஜா உன்னை பத்தி ஒரு கட்டுரை எழுது" என யாராவது சொன்னால் மலைப்பேனே.. அது போல.

"லை உரலுக்குள்ள இனி தப்ப ஏலாது மாப்ள" என்று சிரிக்கிறார்கள் ஜெஸ்!... ஜெஸ், நமக்கு ரொம்ப புடிக்கும் மக்கா, அவுங்களுக்காக ஏதாவது செய்யத்தான் வேணும். அதுனால முதல்ல கடவுள எடுக்கலாம். அதுதான் ஈசி சப்ஜக்ட் . இந்த நாலுகூடவும் என்னை பொறுத்திக்கிறேன் ஜெஸ்...அவ்வளவுதான்.

கடவுள்
(picture by CC license, Thanks Samurai Shiatsu)

ரொம்ப புடிக்கும் ஜெஸ்! நட்புல ரொம்ப நம்பிக்கை இருக்கு. அது போலதான் கடவுளும்! யார் என்ன சொன்னாலும் நான் நினைக்கிறதைத்தான் செய்வேன். நினைக்கிறதை செஞ்சுட்டு, நண்பர்கள்ட்ட பேசுறது மாதிரி கடவுளையும் வச்சுருக்கேன். இது வேணும் அது வேணுமுன்னு எப்படி நண்பர்கள்ட்ட கேட்க முடியாதோ அப்படி அவன்ட்டையும் கேட்க்கிரதில்லை. நண்பர்கள் தர்றது எதையும் மறுக்கிரதில்லை. மறுத்தால் அவன் கஷ்ட்ட படுவானே என்கிற காரணமில்லை. எனக்குன்னு வாங்கிட்டு வந்திருக்கான். எப்புடி மாட்டேன்னு சொல்ல முடியும்? அப்புடி!.. நல்லது, கெட்டது எல்லாம் கேக்குறதுக்கு அவன் தயார். அப்புறம், சொல்றதுக்கு எனக்கென்ன கஷ்ட்டம்? இதுல ஒரு சின்ன unbalance இருக்கு மக்கா. புடிச்சது புடிக்காது எல்லாம் அவன்ட்ட நான் பேசுறது மாதிரி, அவன் எனக்கிட்ட பேசுறது இல்லை. கேட்டால் கடவுள்ங்குறான். கெட்ட ராஸ்கல், இந்த நல்ல நண்பன்!

பணம்
(picture by CC license, Thanks AMagill)

னக்கென்னவோ இதை எழுதுற அளவுக்கு பெரிய விஷயமாய் தோணலை ஜெஸ். எனக்கிட்ட இதெல்லாம் எழுதுடான்னு கேட்டுருக்கீங்க எனக்கென்ன தோணுதோ அதுதான் எழுத முடியும். சரியா? இது எனக்கிட்ட இல்லாத போது யார்க்கிட்டயாவது கேக்குறேன். கிடச்சுருது. சில நேரம் கிடைக்காமையும் போயிருது. கிடைக்கிற வரைக்கும் அலையறேன். கிடச்சதை திருப்பி கொடுக்கணுமுங்குற நியாயம் இதுல இருப்பதால், சில நேரம் ஆப்ட்டுக்குறேன். திட்ட மிடாத சிக்கல் இது. அல்லது, சக்தியை மீறிய சிக்கலாவும் இருக்கு. கொஞ்சம் திட்டமிடலும், செயல் படுத்தலும் இருந்தால், இந்த "சக்தியை மீறிய" என்பதை சந்திக்க உதவியாக இருக்கும்.

அழகு
(picture by CC license, Thanks B. Sandman)

சிவகங்கையில் இருந்து 13 கி.மீ. கண்டுப்பட்டி காளி கோயில். அங்கு நடந்து வருவதாக ஒரு நேர்த்தி இருந்தது. அதி காலை நாலு மணிக்கெல்லாம் நடையை கட்டினோம். நாட்டரசன் கோட்டை ரயில்வே கேட்ட கடந்ததும் ஒரு சின்ன குடிசை வீடு. சின்னதுன்னா, ரொம்ப சின்ன! குடிசை வீட்டுக்குள்ள, ஒரு என்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அந்த அதி காலையில் சோடா பாட்டிலினால் சப்பாத்தி தேய்த்து கொண்டிருந்தார். நியுஸ் பேப்பரில் நாலைந்து சப்பாத்தி தேய்த்து கிடக்கு.சிம்மினி விளக்கொளி இருக்கு. அருகே, அந்த மூதாட்டி சுள்ளிகளை கொண்டு அடுப்பு மூட்டிக்கொண்டிருந்தாள். அந்த காட்சி என்னை மேற்க்கொண்டு நடக்க அனுமதிக்கவில்லை. குடிசையின் முன்னாள் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து விட்டேன். "அய்யா,கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?" என்று பேச்சை தொடங்கினேன். பேச்சு, நூல் பிடித்து, நூல் பிடித்து சப்பாத்தியில் வந்து நின்றது.

"ரெண்டு நாளாய் சப்பாத்தி வேணுமுன்னு அடம் பண்றாப்பூ" என்றார்.இருவருக்கும் பல் அறவே காணோம். வயசானதுனால செமிக்க சிரமமாகுமே என்பது போல நான் கேட்க...

"பொங்கலுக்கு ஊற வச்சு தீபாவளிக்கு திங்கட்டும்" என்றார். எவ்வளவு வயசு. எவ்வளவு அன்யோன்யம். எவ்வளவு நகைச்சுவை. எவ்வளவு அழகும் கூட!

காதல்
(picture by CC license, Thanks eyesplash Mikul)

து அழகான சப்ஜக்ட் மக்கா! இதை பேசி, பேசி, பேசி, பேசி, பேசி, தீராது. அதுனால, உணர, உணர, உணர, உணர, உணர, மட்டும் செய்வோம்! மத்ததெல்லாம், உன்வரைக்கும் பேசீனியல்ல அது மாதிரி இதையும் பேசேன் என்று கேட்கிற ஜெஸ்... கடவுள், காசு, அழகு மாதிரி இதை பொதுவா பேச ஏலலை. அது அவ்வளவு புனிதமாக இருக்கலாம். அல்லது அந்த புனிதம் பற்றி பேசுகிற அருகதை எனக்கில்லாது இருக்கலாம். அதுனால... இந்த ஸ்டாப்பில் பஸ் நிக்காது. போலாம் ரைட்ஸ்ஸ்ஸ்ஸ்!

ன்றியும் அன்பும் ஜெஸ்!

ந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது ஜெகநாதன், பாலா, செய்யது, அந்தோணி முத்து.

ன்புடன்,
பாரா

Saturday, September 26, 2009

மண்டபம்


(picture by C license, Thanks NOMAD)

கோட்டை பெத்தார்
அப்பத்தா
வாசலிலேயே
கடை வைத்திருப்பாள்.

ண்டட்டி, கடுக்கண்.
பயல்கள் சீமையில்
என்பாள்.

ம்பி கிராதி.
கிராதிக்குள்ள பாட்டில்
நாலு.

தொங்குற
பிளாஸ்டிக் பை.

மார்பு
திறந்து கிடக்கும்.
வீசிக்கொண்டிருப்பாள்
பொழுதன்னைக்கும்.

ள்ளதிலேயே
பெரிய வீடு.

ப்பத்தா செத்த போது
எடுத்துப்போட்டோம். .

சும்மா
எடுத்துப்போட்டோம்.

Wednesday, September 23, 2009

தொடர்பதிவு - 2: வரம் கொடு தேவதையே



து நம்ம வசந்த் product! நவாஸ் மெயின் டீலர்!போட்டு தாக்கிட்டாரு நம்மளை. நீங்க ரெண்டு பேரும் கியாரண்டின்னா... கேட்டுரலாம் பத்து வரத்தை!

ரம் ஒன்று:
முதா கொட்டகைக்கும் கிராமத்துக்கும் 3கி.மீ...குறுக்கு வழியாய் அப்பா அழைத்து போனார். பாதி தூரத்தில் நடக்க முடியலைன்னு அப்பா தோளில் தூக்கிகொண்டார். மார்பில் இல்லை. தோளில்! தலை மறைக்கும்ன்னு மணல் குவித்து அமர்த்தினார். துவாரத்தில் இருந்து பீச்சும் ஒளியை திரும்பி, திரும்பி பார்த்தபடி பார்த்த அந்த முதல் திரைப்பட நாளை திருப்பி தர சொல்லுங்க வசந்த்!

ரம் ரெண்டு:
ராமேசுவரத்தில், தாத்தா ஒருவரின் ஷஷ்ட்டியப்த்த பூர்த்தி. பசிக்குதுன்னு அம்மாவிடம் அழுதேன். அந்த அறையில் போயி, அர்ச்சனைக்குன்னு வைத்திருந்த தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை அம்மா எடுத்தாள். யாரோ வர, அம்மா மீண்டும் அந்த தட்டிலேயே போட்டாள். பிள்ளை பசிக்கு அம்மா திருடக்கூட செய்வாள் என்றுணர்ந்த அந்த நாளை திருப்பி தர சொல்லுங்கள் நவாஸ்.

ரம் மூன்று:
கிணற்றடி முற்றத்தில், வானம் பார்த்தபடி முனியம்மாள் அக்காவை கட்டிக்கொண்டு, கதை கேட்ட கதைகளில் ஒரு கதையை உங்கள் தேவதையை சொல்ல சொல்லுங்கள் வசந்த்.

ரம் நான்கு:
வெங்கடேஸ்வர ஐயர் வீட்டில் இருந்து மாங்காய் திருடி, ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு செல்வராஜுடன் தின்ற எவ்வளவோ நாட்க்களில் ஒரு நாளை தேவதையிடமிருந்து வாங்கி கொடுங்க நவாஸ்.

ரம் ஐந்து:
அஞ்சாவது படிக்கிறேன் அப்போ... ராஜ்மோகனுடன் செட்டி ஊரணி கரை வழியாக பள்ளி செல்லும் போது இரண்டு ஆடுகள் விளையாடிக்கொண்டிருந்தது. அம்மா அப்பா விளையாட்டு!.. அன்று அவன் சொல்லித்தான் தெரியும். முதல் நாள் வரையில் தாலி கட்டினால் போதும், குழந்தை பிறந்திரும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த அப்பாவி சிறுவனை திருப்பி தர சொல்லுங்கள் வசந்த்!

ரம் ஆறு:
"ரொம்ப பாக்காதீங்க மாமா.. அப்புறம் சலிச்சு போயிரும்" என்று சிரித்தபடி சொல்லி போனாள் அவள். அந்த முதல் காதலின் முதல் நாளை திருப்பி தர முடியுமா இல்லையான்னு கேளுங்க நவாஸ்.

ரம் ஏழு:
மடியில் மகளை கிடத்தி, "நட்சத்த்திரம்படி அகிலாண்டமுன்னு எழுதுங்கோ" என்று கேட்டுக்கொண்ட புரோகிதரின் முன்னில் இருந்த நெல்லில், கண் நிறைந்து அவள் பெயரை எழுதிய அந்த நாளை திருப்பி தராட்டி நியாயம் இல்லை வசந்த்.

ரம் எட்டு:
"ஏங்க,.. சுந்தர் வந்துட்டு போச்சு" என்று லதா சொல்கிற போதெல்லாம்,"ஐயோ"என்பேன். (இருபது வருடத்திற்கு முந்தைய ஜோக்கா சொல்வான், அதுனால..) எனக்கு நிறைய நண்பர்கள். அவனுக்கு நான் மட்டும். சென்னையில் அவனுக்கு வேலை. எப்போ ஊர் வந்தாலும், பெட்டியை வீடு வைத்த கையோடு வீடு வருவான். ஒரு நாள் தூங்கி எழுந்த போது என் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தான். "இவன் எப்ப புள்ளை வந்தான்" என்று இவளை கேட்டேன். "அப்பதையே வந்திருச்சு,.. எழுப்ப வேணாமுன்னு சொல்லிட்டு படுத்துச்சு, தூங்கிருச்சு போல" என்று சொன்னாள் லதா. ஹிருதயத்தில் ஓட்டை என்று ஒரு நாள் இறந்து போனான்.
"ஏங்க..சுந்தர் வந்துட்டு போச்சுன்னு" ஒரு தடவை லதாவை சொல்ல சொல்லுங்க நவாஸ். என்ன நவாஸ் நீங்க..

ரம் ஒன்பது:
ஆனந்த விகடனில் கவிதை பிரசுரமானதிற்கு முன்னூறு ரூபாய் மணியாடர் வந்தது. "சேலைக்காரர்ட்ட பழைய பாக்கியை கொடுத்துட்டு ஒரு சேலை எடுத்துக்கட்டா" என்று கேட்டாள் லதா, "எப்ப பாரு என்னதான் அப்படி எழதி கிழிக்கிரீர்களோ" என எப்பவும் கேட்க்கிற லதா! அந்த நாள் அவசியம் வேணும் வசந்த்!

ரம் பத்து:
சவுதி வந்த பிறகு, "சசி சைக்கிள் ஓட்டுறான்க" என்று லதா தொலை பேசியில் அழைத்தாள் ஒரு நாள்."யார்புள்ளை பழகி கொடுத்தது" என்று கேட்டதற்கு, "நான்தான் ராஜாஸ்கூல் க்ரவுண்டுக்கு கூட்டிட்டு போயி பழகி கொடுத்தேன்" என்றாள். கண் கலங்கி விட்டது. பிள்ளைக்கு சைக்கிள் பழகி தர்றது எல்லாம் நம்ம டூட்டி நவாஸ். அது இப்பதான் சமீபமா. ஒரு பட்டனை தட்டினா ரீவைண்ட் ஆயிரும். கேட்டு பாருங்க நவாஸ். போயிட்டு வந்திர்றேன்..

என்ன பேசமாட்டைங்கிறீங்க ரெண்டு பேரும்?

வசந்து கொசந்து!
நவாசு கொவாசு!

க. பாலாஜி, ஆருரன் விசுவநாதன், தமிழ் நாடன், சந்தான சங்கர் இவர்கள் வீடுநோக்கி அனுப்புகிறேன் இந்த தேவதையை.

நன்றியும் அன்பும் மக்கா!

ன்புடன்,
பாரா

வாடகை வீடு


(picture by CC license, Thanks Ajay Tallam)

ழைய வீடு போனேன்.
புது மனிதர்
இருந்தார்.

"ஹோ..அப்படியா"
என
உள் நுழைய
சொன்னார்.

புது வீடும் வருவேன்.
புத்தம் புது
மனிதரும்
இருப்பார்.
"ஓஹோ...அ.."
எனும்போதே
உள்நுழைந்திருப்பேன்.

ருநாள்..

Monday, September 21, 2009

தொடர்பதிவு - 1

கோதரி ஹேமாவும், தோழர் சி.கருணகரசும், தோழர் ஷஃபிக்ஸ்ம் அழைத்த தொடர் இது. நல்லா இருங்கப்பா..

அ-அம்மா இங்கே வா வா
அப்பாவின் இறப்பிற்கு பிறகு, அம்மா எப்போதாவது வீடு வருகிறாள். மருமகளின் நல்மனசு சுருங்குமுன், புறப்படுகிறாள். சகோதரிகள் வீடு, சித்தப்பா வீடு, பெரியப்பா வீடு என தத்திகொண்டே இருக்கிறாள். அம்மாவை கூடேவே வைத்து பார்க்க முடியாத ஒரே மகனின் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்.

-ஆசை முத்தம் தா தா.
பயணம் சொல்லிக்கிற போது, இரு கைகளிலும் கன்னம் வழித்து, சொடிக்கிட்டு, கண்கள் தளும்ப தரும் அம்மா முத்தம்! பயணங்களில் கூடவே வருகிறது.


-இலையில் சோறு போட்டு.
ஏழு எட்டு வயதில், ஒரு திருமணத்தில் முதல் பந்தியில் அமர்ந்தேன். "உனக்கென்னடா இப்ப அவசரம்?" என்றார் அந்த பெரியவர். உறவினர். செல்வேந்தர். பிடுங்கி எறிய இயலாதிருக்கிறது பசுமரத்தாணியை.

-ஈயை தூர ஓட்டு.
வெங்காயக்கடை, காய்கறிக்கடை, LIC-ஏஜென்ட், போட்டோ-வீடியோ எல்லாம் செஞ்சு பார்த்தாச்சு, இந்த காரியத்தையும் பார்த்துக்கொண்டே.

-உன்னை போல நல்லார்.
"அப்படியே வர்றான், வாரிசு தப்பாமல். வச்ச இடம் தெரியாமல், எடுத்த இடம் தெரியாமல்-உங்க மகன்" தொலை பேசியில் சிரிக்கிறாள் மனைவி. வாடா...வாடா...வாடா, என் மகனே!

-ஊரில் யாரும் இல்லை.
பெரியப்பாவிற்கு எட்டு குழந்தைகள். அப்பாவிற்கு அஞ்சு. சித்தப்பாவிற்கு மூணு. எல்லோரும் ஒரே வீட்டில் வீடு கொள்ளாது இருந்தோம். இப்போ, வீடு மட்டும் இருக்கு. ஊரில்.

-என்னால் உனக்கு தொல்லை.
"பாதி ஜாமத்துக்கு வராதீங்கன்னு சொல்லி இருக்கேன்ல" என தூக்க கலக்கத்தில் கதவு திறக்கும் தொல்லை, இந்த ஏழு வருசமாய் மனைவிக்கு இல்லை எனலாம்.

-ஏதும் இங்கு இல்லை.
ஒரு வருஷத்தில் மகள் திருமணம் என நினைத்திருக்கிறேன். பை, காலி. நம்பிக்கை மட்டும் இருக்கு.

-ஐயம் இன்றி சொல்வேன்
ஏதும் இங்கு இல்லை-இல் சொன்னதுதான். வேறென்ன?..

-ஒற்றுமை என்றும் உயர்வாம்.
எப்படி, இப்படி இருக்க வாய்த்தது பெரியப்பா, அப்பா, சித்தப்பா?

-ஓதும் செயலே நலமாம்
நிறைய இருக்கு.வழி நடத்துது.

ஒள-ஔவை சொன்ன மொழியாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

தே எனக்கு வழியாம்.
ம்ம்ம்ம்..என்ன சொல்லலாம்? ஒரு கவிதை சொல்லலாம்...

மூன்று செங்கலிட்ட
அடுப்பில் கொதிக்கிறது
திருட்டு கோழி.

சாராயத்திற்கும்
ஆள் போயிருக்கு.

ந்த பிறகே
அழுவேன்
முதலில்
கோழிக்கென..

ஸ்ஸப்பா...... இப்பவே கண்ண கட்டுதே! இதுக்குமேல ஆங்கிலம் வேறயா? சொல்லவே இல்லை.....

A-available/single? --single(in Saudi!).
B-best friend?--அப்பா.
C-cake or pie?--ரெண்டுமில்லை.
D-drink of choice?--நெப்போலியன்-கருப்பு அட்டை.
E-essential item you use every day--சிகரெட்.
F-favoraite color--grey.
G-gummy bears or worms?--அப்படின்னா?..
H-home town?-- சிவகங்கை, வாணியங்குடி.
J-janury or febraury?--or மார்ச்சுவரி என்று கேட்டிருக்கலாம். ராஜேஷ்குமார் டைட்டில் மாதிரி.
K-kids & their names?--மகா, சசி.
L-life is incomplete with out?--அன்பு, காதல்.
M-marriage date?--ஜூலை ஒன்பது.
N-number of siblings?--முதலில் நாலு சகோதரிகள். இப்போ, ஹேமா, சக்தி, புதுசாய் கல்யாணி சுரேஷ் வேறு. அறிய: வீடு காலி இல்லை இனி சகோதரிகளுக்கு. நண்பர்கள் வழியாக வரவும்.(அண்ணன் கேரக்டர் ஆக்கிப்புட்டாங்கப்பா நம்மளை)
O-oranges or apples?--திராச்சை ரசம் - ஊறியது.
P-phobias/fears?--அப்படி எதுவும் இருக்குறதா தெரியலை.
Q-quate for today?--அமைதி!--பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சினைகளை எப்படி அணுகுகிறோம் என்பதில் இருக்கு!
R-reason to smile?--கையில் ஒண்ணுமில்லை. அடுத்த வருடம் மகள் திருமணம்.சிரிக்கிறேன்..
S-season?--மழைக்காலம்.
T-tag for 4 peoples--நவாஸ்,சபிக்ஸ்,துபாய் ராஜா,உதிரா.
U- un known fact about me--அமித்தம்மாவுக்கு அமித்து. மண்குதிரைக்கு தேநீர். எனக்கு இந்த தண்ணி ஞாபகம் ஏன்னு தெரியலை.
V-vegetables you don't like--அப்படின்னு எதுவும் இல்லை.
W-worst habbit--மறதி.best habbit-ம் இதுவே!
X-xray--இடது கை முறிவின் போது.
Y-your favorite food?--சரசு அத்தை செய்யும் நண்டு ரசமும், சுட, சுட, சோறும்.

ஆச்சா! எம்பூட்டு பெருசுன்னு ஜமால் சண்டைக்கு வரக்கூடாது.
நன்றியும் அன்பும் ஹேமா, கருணா, ஷஃபிக்ஸ்.

இந்த தொடர்பதிவை தொடர நான் அன்புடன் அழைப்பது துபாய் ராஜா, என். விநாயகமுருகன், S.A. நவாஸுதீன்.

அன்புடன்,
பாரா.


Thursday, September 17, 2009

நந்தி


(Photo by CC license, Thanks Robyn Gallagher)

பேருந்து
நிறுத்தத்தில்
இறங்கப்போகிற
அவளின்
துப்பட்டா நுனி
பிடித்திழுக்கிறது
பின்னிருக்கை
குழந்தை.

விடுவித்து
கன்னம் நிமிண்டி
சிரித்திறங்கி
போய்விட்டாள்
அவளும்.

டைத்துக்கொண்டு
அருகமர்ந்திருக்கிறாள்
மனைவி

க்குழந்தையாக
மாற
நினைந்திருந்த
என்
மனக்குகை
துவாரத்தை
அடைத்துக்கொண்டு

Tuesday, September 15, 2009

என்ன சொல்லட்டும் முத்தண்ணே


(Photo by CC license, Thanks #)

"புள்ளைகளைக்கூட
வேணாமுன்னு
போய்ட்டவளை
எதை சொல்லிண்ணே
கூப்பிட சொல்றீக?"

முடிவெட்டிக்கொண்டே
பேசிக்கொண்டிருக்கிறார்
முத்தண்ணன்

திலின்றி
குனிந்திருக்கிறேன்

றுந்தறுந்து
விழுந்து
கொண்டிருக்கிறது

கேசம்
போலவே
நேசமும்

Monday, September 14, 2009

ப்ரீதி விடை


(picture by CC license, thanks Jeff Kubina)

செந்நிற நிழலோடு
ஒடுங்குகிறேன்

ழைத்து போகவும்
வந்திருக்கிறாய்
நீ

ழுது புலம்ப
யார்
நாம்

போகும் முன்பாக
நீ
நெகிழ்த்திய
நொடியில்
வாரியணைத்து கொள்கிறேன்
உன் கத்திகளுக்குள்
சிக்காது போன
என் போன்சாய்
கனவுகளை கூட

வானம்
தாழ பறக்கிறது

முன்பு

டைவிடாது
மேலே பரந்த
வானம்

Saturday, September 12, 2009

சருகுதிரும்போதில்


(picture by CC licence, Thanks hj91)

ளர் பிஞ்சு
நகம்கொண்டு
நரம்பு
கிழித்தாடுகிறது
சற்றுமுன் உதிர்ந்த
சருகொன்றை.

தாய் பிரித்த
விடலைப்பூனை.

கிழிக்க கிழிக்க
கொடுத்துக்கொண்டிருக்கிறது
சருகும்.

பூனைக்கும்
சருகுக்கும்
யாருக்கும்

தாய் பிரிக்கிற
தருணம்
போதும் போல
ருதுவாக.

Thursday, September 10, 2009

சுழல் பயணம்



(picture by CC licence, Thanks stumayhew)

திசைகளில்
படுத்துறங்கி கிடக்கிறது
பறவைகளின்
இரைச்சல்.

ரையட்டும்
என கிடக்கலாம்
கதிரவனும் கூட.

ர்ப்பைபுல்
தழுவி
நதி எட்டும்
கடல் மட்டம்.

காற்றும்
இறந்தே வீசுகிறது
சாதக
அ-சாதக
திசை நோக்கி.

பாய்மரச்சுக்கான்
கத்திக்கப்பல் செய்கிறவனின்
கைகளில்.

டப்பாரை நீச்சல்
கை
நீளும் வரையில்.

பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்.

ராவிட்டாலும்
ஆமென் சொல்ல
என்
ஏவாள் இருப்பாள்.

னவே

விடிந்தால் அழலாம்
செய் நன்றி
மனமே.

Tuesday, September 8, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-3

1.
(Photo by CC License, thanks groks)

ற்றங்கரையில்
எடுத்த கல்.

மினு மினுப்பற்ற
வழு வழுப்பு.
வீடு வரையில்
சேர்க்க இயலாத
ஞாபக குறைவு.

ங்கேயே கூட
கிடந்திருக்கலாம்.

ளோட பேரோட
இருந்திருக்கும்.
--------------------------------------------------
2.
ஜாகீர் உசேன்
மளிகை கடையில் பார்த்ததாக
நண்பன் வந்து
சொன்னான்.

யிர் துடித்தது
மயிர்க்கால் அளவு.
நண்பனிடம் சொல்லவில்லை
நான்.
---------------------------------------------------
3.
ன்ன செய்வது
என மலைக்கிற
தருணங்களில்
எனையறியாது
ஏதாவது
செய்து விடுகிறேன்.

"சும்மா இருந்து பாரேன்"
யாராவது சொல்லத்தான்
செய்கிறீர்கள்.

சும்மா இருந்தால்
நல்ல கவிதை
கிடைக்குமோ
ஒருவேளை என
குழம்பவும்
செய்கிறேன்.
---------------------------------------------------

Saturday, September 5, 2009

என்னமாத்தான் வருது...

ள்ளங்கை
தாமரை விரிப்பு.
மேலாக
முந்தானை நூல் சேலை.
மேலுக்கும் மேலாக
தளும்பும்
நீர்ச்செம்பு.

ய்யா மார்களுக்கு
கொண்டு வருகிற
நீர்ச்செம்பு.

முறுக்கு மீசை.
நெற்றி பொட்டு.
அங்கவஸ்திர தெறிப்பு.

ய்யா மார்களின்
அய்யா மார்கள் போலவே
அய்யாவும்.

நீர்ச்செம்பை வாங்கையில்
ஒரு ஈஷு.
கொடுக்கையில்
ஒரு ஈஷு.

டுங்கும்
அவளின் வெறுங்கழுத்தை
விழுங்கி
செரிமானத்துக்கு
நெளிக்கிறது

ங்கொய்யால...
தலை எழுத்து.