Thursday, September 10, 2009

சுழல் பயணம்



(picture by CC licence, Thanks stumayhew)

திசைகளில்
படுத்துறங்கி கிடக்கிறது
பறவைகளின்
இரைச்சல்.

ரையட்டும்
என கிடக்கலாம்
கதிரவனும் கூட.

ர்ப்பைபுல்
தழுவி
நதி எட்டும்
கடல் மட்டம்.

காற்றும்
இறந்தே வீசுகிறது
சாதக
அ-சாதக
திசை நோக்கி.

பாய்மரச்சுக்கான்
கத்திக்கப்பல் செய்கிறவனின்
கைகளில்.

டப்பாரை நீச்சல்
கை
நீளும் வரையில்.

பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்.

ராவிட்டாலும்
ஆமென் சொல்ல
என்
ஏவாள் இருப்பாள்.

னவே

விடிந்தால் அழலாம்
செய் நன்றி
மனமே.

31 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்
////


அருமையான வரிகள்
மனதை சுழற்றும் கவிதை

மணிஜி said...

உங்க நம்பர் கொடுங்க.காத்திருக்கிறேன்

யாத்ரா said...

அருமையான கவிதை, மிகவும் பிடித்திருக்கிறது.

na.jothi said...

சுழல் பயணம்
நல்லா இருக்கு அண்ணா

Nathanjagk said...

//வராவிட்டாலும்
ஆமென் சொல்ல
என்
ஏவாள் இருப்பாள்//
இது​போதும்! இரண்டு உதயங்களையும் இரண்டு அஸ்தமனங்க​ளையும் எனக்காக ப்ரத்​யேகமாக ​செய்ததற்காக!

அப்புறம்...
//தர்ப்பைபுல்தழுவிநதி எட்டும்கடல் மட்டம்//
கடல்மாசுப்பாட்டிற்கு நீங்கள் இவர்க​ளையும் (!?) காரணிப்படுத்துகிறீர்களா??? அவ்வ்வ்!

ராஜா சந்திரசேகர் said...

பறைவகளின்...திருத்தவும்,பறவைகளின்.எளிமையான பார்வை அர்த்தப்படுத்துகிறது வாழ்க்கையின் விசாலத்தை.

ராஜா சந்திரசேகர் said...

பறைவகளின்...
திருத்தவும்,பறவைகளின்.
எளிமையான பார்வை அர்த்தப்படுத்துகிறது வாழ்க்கையின் விசாலத்தை.

September 10, 2009 7:01 PM

thiyaa said...

//பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்.


வராவிட்டாலும்
ஆமென் சொல்ல
என்
ஏவாள் இருப்பாள்.
//

நல்ல கவிதை
மனம் சுழல்கிறது

kathirvelmuniyammal said...

மனதைக் கவ்விப் பிடிக்கிறது

பாலா said...

ஆயிரம் "வாவ்" கள் உங்களுக்கு பார்சல் பா.ரா
அருமை

Ashok D said...

சூப்பர் சார் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்.//

கிரேட்...

rvelkannan said...

ஒவ்வொரு வரிகளுக்கும் சுழல்கிறது
மனது

சந்தனமுல்லை said...

சுழல்கிறது கவிதை வரிகள் - அருமை!!

மண்குதிரை said...

ellam arumaiyaaka irukkiRathu
tone viththiyaasamaa theriyuthu

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லாருக்கு

நர்சிம் said...

உங்கள் கவிதைக் குரல்களின் இரைச்சல் இதயம் நிரப்பி,சுரப்பி வேலை செய்கிறது..நீண்ட நேரமாய்.

இரசிகை said...

suzhal kavithai suzhalppikkirathu........

aththanaiyum azhagu:)

kalakkureenga rajaram sir!!

ஹேமா said...

அண்ணா மனமும் கவிதைக்குள் சுழல்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதை கலக்கல் நண்பரே!

க. தங்கமணி பிரபு said...
This comment has been removed by the author.
நேசமித்ரன் said...

கரையொதுங்கி கிடக்கிறேன் பா.ரா .

பவளப்பாறைகளின் நகரும் ஒளிநிழல் இந்தக் க்விதை

பா.ராஜாராம் said...

தண்டோரா
===========
ப்ரியங்கள் நிறைந்த என் மணி,
rajaram.b.krishnan@gmail.com.என் மின் முகவரி.அதில் உங்கள் அழைப்பு எண் தெரிய படுத்தினால் நான் அழைக்கிறேன்(என்னால் குறைந்த செலவில் அழைக்க இயலும்).உங்களை எல்லாம் இறுக்கிக்கொள்ள நான்தான் தவம் கிடக்கிறேன். நன்றி மை டியர் மணிகண்டன்!

க.தங்கமணி பிரபு.
==================
சென்று பார்த்து,மின் மடல் அனுப்பி இருக்கிறேன்.தெரியபடுத்தியதிற்கு நன்றி.விடியனும் கடவுளே..நண்பர்களும் செய்யுங்களேன்.

கவிதாசிவகுமார் said...

மனதைச் சுழல வைத்தது கவிதை. வரிகள் ஒவ்வொன்றும் நெக்குருக வைத்தது.

இரவுப்பறவை said...

//காற்றும்
இறந்தே வீசுகிறது
சாதக
அ-சாதக
திசை நோக்கி.//

அழகான வரிகள்...

காமராஜ் said...

//வராவிட்டாலும்
ஆமென் சொல்ல
என்
ஏவாள் இருப்பாள்//

நிகழ் வாழ்வின் உப்புகரிப்பு
எளிய வரிகளில் பளீரெனச் சாடுகிறது.
ஒரு வார்த்தையில் பின்னூட்டமிட
மனம் ஒவ்வவில்லை.

S.A. நவாஸுதீன் said...

நண்பா! இப்படி ஒரு கவிதை கருவேல நிழலில் மட்டும்தான் கிடைக்கும். வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம் இப்போது

SUFFIX said...

நல்லா இருக்கு நண்பரே!! கருவேல் நிழலில் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு.

அன்புடன் நான் said...

கவிதை நல்ல அமைவாய் இருக்குங்க.

கல்யாணி சுரேஷ் said...

//பிழைத்தும் கூட வரலாம்
பிரேதமேனும்
கரையில்.//

பிடித்தமான வரிகள்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்...
உலவு.காம்,
மணிகண்டன்,
யாத்ரா,
ஜோதி,
ஜெகன்,
சந்திரா(நல்வரவு சந்திரா.திருத்தியாச்சு.நன்றி.)
தியா,
திரு.கதிர்வேல்,
பாலா,
அசோக்,
வசந்த்,
வேல்கண்ணா,
முல்லை,
மண்குதிரை,
அமித்தம்மா,
நர்சிம்,
ரசிகை,
ஹேமா,
ஜெஸ்,
நேசா,
உதிரா,
இரவுப்பறவை,
காமராஜ்(நல்வரவு நண்பரே)
நவாஸ்,
சபிக்ஸ்,
கருணா(நல்வரவு கருணா)
கல்யாணி சுரேஷ்(நல்வரவு கல்யாணி)

எல்லோருக்கும் என் நிறைந்த நன்றியும் அன்பும்!