Saturday, August 1, 2009

ஐவரானோம்...



காலங்களுக்கு பிறகு மீண்டும் குமார்ஜியிடமிருந்து முதல் கடிதம் வந்திருந்தது. இதைவிட இந்த நண்பர்கள் தினத்தில் வேறு எந்த கருமாந்திரத்தை நான் பதிவு செய்துவிட இயலும்.
------------------------------------------------------------
அன்புள்ள ராஜாராம்...நலம்தானே.

திடீரென சுந்தர் மூலமாக உன் இருப்பிடம் தெரிந்து தொலை பேசியில் உன்னை தொடர்பு கொண்ட அந்த வினாடி அற்புதமானது. எப்போதாவதுதான் இது போன்ற சாத்தியங்கள் நிகழும், நம்மிடமிருக்கும் கடைசி நூறு ரூபாய் நோட்டை மாற்றுவதற்குள் சம்பளம் வந்து விடுவது போல.

சரியாக சொன்னால் பதினாலு வருடங்களுக்கு முன் நாம் செந்தமிழ் நகர், சிவகங்கையில் சந்தித்ததும், லதா மற்றும் குழந்தைகளுடன் (நீ வரவில்லை) ஒரு சினிமா பார்த்ததும், நேற்று போல் இருக்கிறது. அப்போது அரவிந்த் குட்டி பையன், சசி போல. கால நகர்த்தலில் நாம் எங்கெங்கோ சென்று, எப்படி எப்படியோ வாழ்வை இறந்து கொண்டிருந்தாலும், இரந்து கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் நாம் அப்படியே திருந்செந்தூர் நாழி கிணற்று தண்ணீர் போலத்தான் இருந்திருக்கிறோம்.

வேறு என்ன... நிறைய பேச வேண்டியுள்ளது ... அல்ல... எழுத வேண்டியுள்ளது. நான் எதையுமே எழுதுவதில்லை. எழதிய இரண்டு கவிதைகளையும் (அரவிந்த்...ஆர்த்தி) வாசித்து கொண்டிருக்கவே வாழ்க்கை சரியாயிருக்கிறது.

நீ எப்படியிருக்கிறாய்.... L.I.C. agent வேலை என்னாச்சு? எது உன்னை வளைகுடா நாடு வரையில் வளைகாப்பு வைத்து அழைத்து சென்றது?... மகாலெட்சுமி என்ன படித்தாள்... எப்படியிருக்கிறாள்... சசிக்கு என்ன உடம்பு... (தெய்வா சொன்னான்) லதாவுக்கு என்ன...
நீ எவ்வளவு நாளாய் அங்கேயிருக்கிறாய்... எப்பெப்போ வந்து போனாய்... தினம் வீட்டிற்கு பேசுவாயா... உன் தொழில் என்ன... வாழ்க்கையின் துரத்தல்கள் பற்றி என்னை விட மிகவும் அழகாக நீ எழுதுவாய். நிறைய கேள்விகள்தான் தற்போது இருக்கின்றன. எனக்கு ஈ.மெயில், பிளாக்ஸ்பாட் எல்லாம் தெரியாது. தெரிந்தது சிறிது எழுதவும் நிறைய படிக்கவும் மட்டும்தான். அந்த சிறிய எழுத்துதான் உன்னையும் சுந்தரையும் பெற்று தந்தது. எனவே தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி அஞ்சு பக்கம் எழுது.

கடிதமோ, பிளாக்ஸ்பாட்டோ, ஈ.மெயிலோ கருத்துக்கள் ஊடகங்களிலில்லை மனங்களில் மருகிகொண்டிருக்கிறது.ஊடகங்கள் வேகம் தாங்கிகள் .மனதை விட சற்றுகுறைந்த வேகத்திலான...

எழுது.

என்றும் உன்
குமார்ஜி
அன்புடன்.
-----------------------------------------------------------

ன்னால், என் நண்பர்களுக்கு பதில் சொல்ல இயலவில்லை. என் நண்பர்கள் என்னை தேடுவது போல் நான் அவர்களை தேடவில்லையோ என்கிற குற்ற உணர்வு எப்பவும் என்னிடம் உண்டு. ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, இன்று ஞாயிற்று கிழமை என்பது போல் சாதாரணமாக தொடங்கியது குமார்ஜியின் பேனா நட்பு. கால கிரமத்துள், தெய்வா, சுந்தரா (ஜீவராம் சுந்தர். இப்ப, ஜ்யோவ்ராம் சுந்தர்) கோவை சிநேகிதி ப்ரபா என்று மணி மணியான நான்கு நண்பர்களை பெற்று தந்தது. வாரம் இரண்டு அல்லது மூன்று கடிதங்கள் வரும்-ஒவ்வொருவரிடமிருந்தும்!.. கடிதம் வராத நாள் இல்லை எனலாம். குடும்பத்தில் எது நிகழ்ந்தாலும் மற்ற நால்வரும் அறிந்திருந்தார்கள். போலவே..அவர்களிடமிருந்தும்.

தினம் விடியும் நாள் போல தினம் தினம் விடிவதில்லைதானே. சசி என்கிற என் இரண்டாவது மகன், ஒரு நாள் திறந்திருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டான். அவன் விழுந்த நொடி முதல் சற்றேறக்குறைய மூன்று வருடங்கள் முன்பு வரையில் சட்டியில் வைத்து சவ்வாக கரைக்க தொடங்கியது வாழ்வு என்னை-திரிந்தும் விடாது...நீர்த்தும் விடாது பதமான சவ்வாகா... எல்.ஐ.சி.முகவர் வருமானமே பிரதானம் அப்போது. அது எங்கள் நாலு பேரின் உணவுக்கு சரியாக இருந்தது. உறவுகள், நண்பர்கள் "கை" உதவி கொண்டு சசி எழும்பி உட்கார தொடங்கினான். பிள்ளையை காப்பாத்தியாச்சு என மூச்சு விட்டு கொள்ள கடவுள் என்னை அனுமதிக்க காணோம். திடீர், திடீர் என சசிக்கு வலிப்பு வர தொடங்கியது. தூக்கிக்கொண்டு மதுரை ஓடுவோம். முறை வைத்து கொண்டு நானும், லதாவும் தூங்கிய காலங்கள் எங்களிடம் இருந்தது. தொட்டியில் விழுந்த அதிர்ச்சியில் மூளையில் ஒரு நரம்பு சுருண்டு கொண்டு விட்டதாகவும், தொடர் சிகிச்சையில்தான் சரி செய்ய இயலும் என மருத்துவர்கள் சொன்னார்கள். சிகிச்சை தொடங்கியது. உணவிற்கு இணையாக அவன் மாத்திரைகள் சாப்பிட தொடங்கினான். மருத்துவ செலவிற்கான என் பண தேவைகள் என் சக்திக்கு மீறியதாகவே இருந்தது. சக்தியை விட என் சசி தேவையாக இருந்தான். சிவகங்கையின் சகல தெருக்களிலும் கடன்காரர்கள் தோன்றலானார்கள் எனக்கு. ஒரு தெருவில் நுழையும் முன்பாக, கடன்காரர்களின் வீடரிந்து மாற்று வழியில் அழைத்து செல்ல என் TVS50 படித்திருந்தது. முதலாளியின் அசிங்கம் அதற்கும் ஒவ்வாமையாக இருந்திருக்க வேணும். இப்பவும் கூட அந்த காலங்களை திரும்பி பார்க்க மனசுக்கு திராணி இல்லாமல்தான் இருக்கிறது.

வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கிற ஒரு சாதாரண போராட்டத்தில் அசாதாரணமான நாலு நண்பர்கள் மனசமிழ்ந்து போயினர். "என்னாச்சுடா ஏன் பதிலே காணோம்" என்று வெகு காலம் வரையில் நண்பர்களிடமிருந்து கடிதம் வந்து கொண்டே இருந்தது கடிதத்தை எடுத்து வைத்திருக்கிற லதாவிற்க்கும், கடிதத்தை படிக்கிற எனக்கும் கண்கள் கலங்கும். உதறி வாழ்வை சந்திக்க தயாராவோம். பிறகு அவர்களை தேட நேரம் கிடைக்க காணோம் எனக்கு. ஓட்டமும் நடையும்... ஓட்டமும் நடையுமாக நான் சவுதி அடைய நேரிட்டது. இதோ...சசி தத்தி தத்தி ஒன்பதாம் வகுப்பு வரையில் வந்து, ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறான். ஜீவ மரண போராட்டத்தில் ஜெயித்திருக்கிரானே... யாருக்கு வேணும் அவன் வகுப்பு தோல்வி?.. மகள் திருமணத்திற்கு நிற்கிறாள்.

ப்படியான ஒரு தருணத்தில், எப்பவோ முகர்ந்த என் எழுத்து வாசனை கொண்டு சுந்தரா என்னை தேடி அடைந்தான். சுந்தர் மூலமாக, குமாரும், தெய்வாவும்! இன்னும் ப்ரபாவை மட்டும் காணோம்... ப்ரபா.. .மக்கா... எங்கிருக்கிறாய்?.. குழந்தைகள் உண்டா.. கணவர் பெயர் என்ன... சீக்கிரம் நீயும் வாடா...பிட்டுக்கள் வைக்கிற தேங்காய் பூ வாசனை மாதிரி என் வாழ்வு அவித்த வாசனையை நீயும் உணர்ந்து ஏற்றுக்கொள். மீதியை வரும் காலங்களில் பார்க்கலாம்.

அன்புடன்,
பா.ராஜாராம்

குமார்ஜி எழுதியனுப்பிய கவிதைகள்:

பழைய கவிதை ஒன்று

முக்கியம்
ப்படித்தான் இருக்க வேண்டும்
என்று எதுவும் இல்லை.
எப்படியும் இருக்கலாம்
என்றும்
எல்லாமும் இல்லை.
எப்படியும் இருக்க வேண்டும்.
இருத்தல் என்பது அவ்வளவு
முக்கியம்.
முக்கியம் என்பது
இருத்தல் மட்டும் தானா?

சுந்தருக்கு பிடித்த ஒரு பழைய...
வனை நகர்த்தி
தானும் நகரும்
சப்பரத்தெய்வம் .

புதிது (உனக்காக)
நாமாக எதையும் தேர்ந்தெடுப்பதில்லை.
நாம் தேர்ந்தெடுக்க பட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதற்கும். எப்பொழுதும். எப்போதாவதும்.
பயனற்று போகின்றன
நிறைய பயன்கள்.

41 comments:

நட்புடன் ஜமால் said...

நண்பர் தின நல் வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

நண்பரின் கடிதம் - மிகவும் நெகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.
உங்களின் வரிகள் - உலகின் மற்றொரு மிகச் சிறந்த தந்தையைக் காட்டுகிறது.

கவிதையை கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வந்து படிக்கிறேன். இந்த மனநிறைவு தற்சமயம் போதுமானது.

S.A. நவாஸுதீன் said...

இனிய நம் தின வாழ்த்துக்கள் நண்பரே

S.A. நவாஸுதீன் said...

முக்கியம்
இப்படித்தான் இருக்க வேண்டும்
என்று எதுவும் இல்லை.
எப்படியும் இருக்கலாம்
என்றும்
எல்லாமும் இல்லை.
எப்படியும் இருக்க வேண்டும்.
இருத்தல் என்பது அவ்வளவு
முக்கியம்.
முக்கியம் என்பது
இருத்தல் மட்டும் தானா?

இருந்தால் இவன்போல் இருக்கவேண்டும் என்று சொல்வது போல் இருத்தல் முக்கியம்.

S.A. நவாஸுதீன் said...

புதிது (உனக்காக)
நாமாக எதையும் தேர்ந்தெடுப்பதில்லை.
நாம் தேர்ந்தெடுக்க பட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதற்கும். எப்பொழுதும். எப்போதாவதும்.
பயனற்று போகின்றன
நிறைய பயன்கள்.

கவிதை அருமை நண்பரே

துபாய் ராஜா said...

நெகிழ்வானதொரு நண்பர்கள் தின பதிவு.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Veera said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

நீங்களே சொன்னது போல, நண்பரின் கடிதத்தை விட, நண்பர்கள் தினத்துக்கு வேறு பெரிய பரிசு எதுவும் இருக்காதுதான். நல்ல பகிர்வு.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ஜமால்,நவாஸ்,ராஜா,வீரா...நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மக்கா!

ஷங்கி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்! அன்பரே, உங்கள் எளிமையான கவிதை மாதிரி நெகிழ்ச்சியாக எழுதியிருக்கிறீர்கள். ஐவரின் நட்பு புதுப்பொலிவு பெற வாழ்த்துகள். உங்கள் நண்பரின் கவிதையும் அருமை!

ஆ.ஞானசேகரன் said...

நண்பர் தின நல் வாழ்த்துகள்.

மனுநீதி said...

நெகிழ்வான பதிவு சார்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பாலா said...

உங்ககிட்டேர்ந்து நான் நிறைய படிக்கணும் போல வாழ்க்கையை ,எழுத்தை, இன்னபிற .
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அய்யா

அந்த "இருத்தல் "
ரொம்ப அவசியம் தான் .ஆனா அதுமட்டும்தானாங்குற கேள்வி (அற்புதம் ) யோசிக்க வைக்குது

சந்தனமுல்லை said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்! மிக நெகிழ்ச்சியாக இருந்தது....சசிக்கு வாழ்த்துகள்!!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் சங்கா,சேகர்,மனு நீதி,பாலா,சந்தன முல்லை,இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

Nathanjagk said...

அன்பு பாரா,
விதியின் வீதியில் முகவரி ​தொலைத்த குழந்தையாய் அலைவுறும் அனுபவம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை அசை​போட்டு அருமையாய் மீட்டெடுக்க சிலரால்தான் முடிகிறது.
தினம் விடியும் நாள் போல தினம் தினம் விடிவதில்லைதானே என்ற அநித்தியத்தை விடியலாக்கி, யாருக்கு வேணும் அவன் வகுப்பு தோல்வி என்று விரக்தியை தண்ணீர் குடித்து அடக்கும் சிறு விக்கலாக்கி விட்டீர்கள்!
//இவனை நகர்த்தி
தானும் நகரும்
சப்பரத்தெய்வம்// சுந்தருக்கு மட்டும் பிடிக்கவில்லை.
பயனற்று போகின்றன நிறைய பயன்கள் - உண்மைதான். எதுவுமே கிடைக்கின்ற நேரத்தைப் பொருத்துத்தான் அதன் அருமை ​தெரிகிறது!
நட்புநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா!

ஹேமா said...

ராஜா தூரத்து நண்பியாய் என் இனிய வாழ்த்துக்கள்.உங்களைக் கற்பனையில் நினைத்துப் பார்த்தேன்.இந்தக் கடிதம் கண்டதும் நீங்கள்-உங்கள் உணர்வு எப்படியிருந்திருக்கும்.
அப்பாடி.என்றோ காணமல் போன பொருள் ஒன்றைத் திரும்பவும் பெற்றுக்கொண்டால்...!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

Anonymous said...

மனம் கனத்துப்பேனது. மிகவும் நெகிழ்வான பதிவு.
சசிக்கு எனதி வாழ்த்துக்களும் அன்பும்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இவனை நகர்த்தி
தானும் நகரும்
சப்பரத் தெய்வம்

எனக்கு மிகப் பிடித்த எவ்வளவு நாளானாலும் மறக்காத கவிதை!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் பதிவை முழுதும் படிக்க இப்போதான் நேரம் கிடைத்தது நண்பரே. சரியான நாளில் நீங்கள் தந்த நெகிழ்வான, நட்பான பதிவு. உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை நண்பர்களுடன் , அன்புடன் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கடவுள் துணையிருக்க வேண்டிக் கொள்கிறேன்.

நர்சிம் said...

கருவேலம் தான் நிஜமாகவே.நிழலாக நண்பர்கள் இருப்பது மகிழ்வு.

நேசமித்ரன் said...

தீராப் பிரியங்கள் நிரம்பிய பா.ரா.

முள்ளின் நுனி சுமக்கும் பனித்துளி இமைகளையும் நனைத்து கொண்டிருக்கிற வாழ்வின் நித்திய வேதனைகள் .அவசங்களில் இருந்து முற்றிலும் பெயர்த்துக் கொள்ள வியலாத பெருந்தீ தழும்புகள் .பிரியங்கள் தேடி கண்டடைந்த கணம்
வாழ்வின் மீதான பிடிமானங்களை சரியும் இடுப்புக் குழந்தையை மீண்டும் இடுப்பிலேற்றி கொள்வது மாதிரியான நிமிஷங்களை தருவதென்று நானும் உணர்ந்திருக்கிறேன் .
உன்னதமான பிரியம் ஆற்று மணல் மாதிரி வாழ்வின் பயணம் அலசி அலசி
காகப் பொன் மாதிரி ஒளிர்கிறது .வாழ்வு துரத்திய தூரம் தான் நண்பா நம்மை
தூர தேசிகளாய் வைத்திருக்கிறது ஏழு கடல் ஏழுமலை கடந்து மனசென்னவோ பால்யத்தின் வசந்தங்களையும் பிள்ளையின் பெருவிரல் நகத்திலும் அல்லவா கிடக்கிறது .
குமார்ஜி கவிதைகள் குயில் தன்னை குயில் என்பது உணரும் காகத்தின் கொத்தல்கல்கள் .

இரண்டுடிரங்குப் பெட்டி கடிதங்கள் என்னிடமும் உண்டு
:)
எந்த அறை என்று தெரியாமல் ஏதோ ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டு
விடாமல் தாய்க் கோழியை அழைத்துக் கொண்டிருக்கும் கோழிக்குஞ்சு
இருக்கத்தான் செய்கிறது மனசில் எங்கோ...

நேரம் இருந்தால் தனி மடல் எழுதுங்களேன்

nesamithranonline@gmail.com

இரசிகை said...

kadaisiyil iruntha yella kavithaikalume azhago azhagu......

ippadikku namuttu sirippu rasihai:)

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்...
ஜெகநாதன்
ஹேமா
ஜெஸ்வந்தி
அமிர்தம்
ஜ்யோவ்ராம்சுந்தர்
நர்சிம்
நேசமித்ரன்
இரசிகை
நண்பர்கள் தின வாழ்த்துக்களும் நன்றிகளும்!

சப்ராஸ் அபூ பக்கர் said...

////இப்படித்தான் இருக்க வேண்டும்
என்று எதுவும் இல்லை.
எப்படியும் இருக்கலாம்
என்றும்
எல்லாமும் இல்லை.
எப்படியும் இருக்க வேண்டும்.
இருத்தல் என்பது அவ்வளவு
முக்கியம்.
முக்கியம் என்பது
இருத்தல் மட்டும் தானா?////

இருத்தலின் முக்கியமும், கடிதமும் அருமை......

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

கவிதாசிவகுமார் said...

தங்களின் பதிவைப் படித்ததும் மனம் கனத்துப் போனது. மென்மையான அன்புள்ளம் கொண்ட உங்கள் மனம்போல் சசிக்கு இனி சரியாகிவிடும். நம்பிக்கையோடு இருங்கள் சித்தப்பா.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்
சப்ராஸ் அபு பக்கர்
தமிழ்(கவிதும்மா)
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்களும்...நன்றிகளும்!

யாத்ரா said...

நேற்று கூட உங்களைப் பற்றியும் குமார்ஜி அவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேர்ம். இந்த வாழ்க்கை தான் எவ்வளவு சுவாரஸ்யமானது இல்லையா, மனசு முழுக்க நிரம்பி வழிகிறது எனக்கு.

மண்குதிரை said...

kumarji kavirthai arumai

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

சசிக்கு எனது அன்பும், வாழ்த்தும்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்
யாத்ரா
மண்குதிரை
அமிர்தவர்ஷிணி அம்மா
நண்பர்கள் தின வாழ்த்துக்களும் நன்றிகளும்!

இரசிகை said...

naan mela irukkum kadithaththaiyum,atharkaana pathilaiyum ippothaan padiththen..
pullarichchathunga!!

nalla velai neenga vera yethuvum new post seiyala.. illaatti ithai naan miss seithiruppen.:)

vaarththaiye illainga..
vazhththukkal mattum.....

ippadikku
namuttu sirippu rasihai:)

இரசிகை said...

mithran sir reply..... azhagu:)

இரசிகை said...

yenakkum kadithangal naale kaathal thaan.....

Radhakrishnan said...

கண்கள் கலங்க வைத்த இடுகை. நட்புடன் இணைந்து சந்தோசித்து இருப்பது சுகம். சசி வெல்லட்டும் வாழ்வில்.

பா.ராஜாராம் said...

இரசிகை
வெ.இராதாகிருஷ்ணன்
நன்றியும் நிறைய அன்பும்!

தமிழன்-கறுப்பி... said...

எவ்வளவு சொற்கள் வைத்திருக்கிறீர்கள்...!
எப்படி வாசிக்காமல், எழுதாமல் அவ்வளவு காலம் இருந்தீர்கள், அதுசரி நீங்கள் இத்தனை வருட சவுதி வாழ்க்கையில் எழுதி இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் அதெல்லாம் கைவசம் வைத்திருக்கிறீர்களா..?

தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் இடைவெளி விட்டு இந்தப்பதிவுவரை படித்து முடித்திருக்கிறேன் அதுதான்...

பா.ராஜாராம் said...

முதலில்...உங்களின் உரைநடை சிறுகதை போட்டி வெற்றிக்கு வாழ்த்துக்கள் தமிழன் கறுப்பி.அபரிதமான நடை.யதார்த்த செறிவும்.தகுதியான பின்பே வாசிக்க நேர்ந்தது.நியாயமான தேர்வும்.மீண்டும் வாழ்த்துக்கள் மக்கா.வந்து வாசிக்கிறீர்களே,.அதுவே சந்தோசம் எனக்கு.நன்றி மக்கா.எழதியது முன்பு போல் தொலையாமல் இருக்க,என ஏற்பாடானதே இது.இதில்,இதோ இப்போ நீங்கள் வந்து வாசித்து சிலாகிப்பது இன்னொரு வகையான சந்தோசமே. நேரம் கிடைக்கிற போது வாருங்கள்.எழுதும் மனிதன் தரும் உற்சாகம் அலாதியானது.

'பரிவை' சே.குமார் said...

படித்ததும் கண்கலங்கி விட்டது.

ராகின் said...

நம் உயிர் நம் முன்னே வலிப்புடன் போராடுவதை கையாலாகாமல் பார்ப்பது போலொரு வாழ்வின் உச்சக் கட்ட துயரம் வேறொன்றும் இல்லை.. என் செல்ல மகள் மூன்று வயதில் என் மடியில் கிடந்து வலிப்புடன் போராடிய அந்தக் கணம் இப்போது நினைத்தாலும் என் உதிரம் உறையும்..

சசி வாழ்வினை கொண்டாடுவான்.. மனப்பூர்வ ஆசிகள்!!