Thursday, August 13, 2009

கடவுளும் நாமும்


(photo by CC license, thanks Original Nomad)

வசர அவசரமாய்
பேசி விலகுகிறோம்
அலுவலகம்
போகும் நாம்

டுதுறை-20
ஐ.ஆர்.-8
குதிரை சம்பா
பொன்னி
பூக்காத பருத்தி
தீஞ்ச தென்னை
பூச்சிமருந்து
கரும்பு திருட்டு
காகம் அப்பும் கடலை
வங்கி கடன்
பிள்ளைக்கு வாந்தி
பிறகு பேதி வேறு

"ன்னடா கெறக்கமா
இருக்கிற..மூதி
உனக்கு மட்டுமா
நொட்டையும் நொங்கும்
ஆக வேண்டியதை பாரு"

டுப்பில் நிமிண்டி சிரிக்கிறான்
வெளியில்
வியர்வை மணக்கும்
ஒருவன்

வ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்

19 comments:

sakthi said...

தவ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்

நிதர்சனம் ராஜா ராம் சார்

na.jothi said...

நல்லா இருக்கு அண்ணா

ஹேமா said...

சுயநலம் கூடிய இன்றைய உலகில் யதார்த்தமாய் சிந்தித்து இருக்கிறீர்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சத்தியம்

-ப்ரியமுடன்
சேரல்

அ.மு.செய்யது said...

//தவ்வி விலகி
தாண்டி போகிறோம்
உள்ளில்
புழுத்து நாறும்
நாம்
//

நான்கைந்து சொற்களில் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல வரிகள்.

ஆழமான கருத்துக்களை கொண்ட கவிதை.அருமை ராஜாராம்.

RaGhaV said...

கவிதை அழகு.. :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இடுப்பில் நிமிண்டி சிரிக்கிறான்வெளியில்வியர்வை மணக்கும்ஒருவன்
தவ்வி விலகிதாண்டி போகிறோம்உள்ளில்புழுத்து நாறும்நாம் //

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

மண்குதிரை said...

excellent sir. romba pitichchurukku

நேசமித்ரன் said...

பா.ரா

மேகங்களை சுருக்கி ஒரு ஊசிப் போடும் மருந்து டப்பாவில்
அடைக்கும் கலை கைவரப் பெற்றிருகிறீர்கள் நீங்கள் வேறென்ன சொல்ல

ப்ரியமுடன் வசந்த் said...

மிகவும் வெளிப்படையான வெளிப்பாடுகள் சார்

யாத்ரா said...

அருமையான கவிதை, உண்மை.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் சக்தி,ஜோதி,ஹேமா, சேரல்,அ.மு.செய்யது,ராகவன்.அமித்து அம்மா,மண்குதிரை,நேசா,வசந்த்,யாத்ரா,மிகுந்த அன்பும் நன்றியும்.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம் நல்லாயிருக்கு நண்பா

சென்ஷி said...

அருமையான கவிதை!

S.A. நவாஸுதீன் said...

இடுப்பில் நிமிண்டி சிரிக்கிறான் வெளியில் வியர்வை மணக்கும் ஒருவன்
தவ்வி விலகி தாண்டி போகிறோம் உள்ளில்புழுத்து நாறும்நாம்

அருமையா சொல்லிட்டீங்க நண்பா. பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என்,...சேகர்,சென்ஷி,நவாஸ் மிகுந்த நன்றியும் அன்பும்.

நந்தாகுமாரன் said...

:)

பா.ராஜாராம் said...

நன்றியும் அன்பும் நந்தா.

இரசிகை said...

nitharsanam.........:)