Saturday, September 4, 2010

அம்மாக்களும் கவிதைகளும்

ஒன்று


(Picture by cc licence, Thanks Romana Klee)

முகத்தில் நிறைய
கரும் புள்ளி வந்துருக்கேடா
கரும்புள்ளி என்றால்
கஷ்ட காலமேடா
என்றாள் அம்மா.

முகத்தில் தானேம்மா புள்ளி
புள்ளியில் இல்லையே முகம்?
என்றதற்கு,

புள்ளியையும் சேர்த்து
முகத்தை வழித்து
சொடுக்கிக் கொண்டாள்.

ஷ்ட காலம்
இந்த அம்மா.

***

இரண்டு


(Picture by cc licence, Thanks Hector Garcia)

ப்படிப்பா உங்களுக்கு சித்தி
வந்துட்டு போனவுங்க?
என விசாரித்தான் மகன்.

ப்பா இருக்கேன்லடா
அப்பாவோட அப்பா இருக்கார்ல
அவரோட தம்பி இருக்கார்ல
அவரோட...
என்று தொடங்கியிருந்தேன்.

ங்கப்பா எனக்கு என்ன முறைன்னு
முன்னாலேயே தெரிஞ்சிருந்தா
நாமளாவது நல்லாருந்திருப்போம்டா
என முடித்து வைத்தாள்...

கனின் அக்காவோட
அம்மாக்காரி.

***

டிஸ்கி:- எனவே நண்பர்காள், வீட்டிற்கு வரும் போது, "இவர் எனக்கு வெறும் சித்தப்புதான்" என்று சொல்லி வைத்தால் போதும்.

***

நன்றி தமிழ்மணம் மற்றும் நண்பர்காள்!


Friday, September 3, 2010

வீடுகளும் கவிதைகளும்

ஒன்று

(Picture by cc licence, Thanks Travelmeasia)

திர் வீட்டில்
தேக்கு மரம்.

ம் வீட்டில் வெறும்
டேபிள் ரோஜா.

திர் வீடு
விசாலமானது.

ம் வீடு வெறும்
பத்துக்கு பத்து.

ப்பப் பார்த்தாலும்
நம் வீட்டில் மகள் அழுவாள்.
அல்லது மனைவி.

ப்படி பார்த்தாலும்
நம் வீட்டில் மட்டுமே
சத்தம் கேட்கும்.

***

இரண்டு

(Picture by cc licence, Thanks David McKelvey)

நாய்கள் ஜாக்கிரதை
கண்ணைப் பார் சிரி
வீடு விற்பனைக்கு

மாறி மாறி கூவுகின்றன
போர்டுகள்

தே கதவில்
அவர்களைப் போன்றே
கூசித் தொங்குகிறது
post எழுதிய பெட்டி.

***

Thursday, September 2, 2010

கேட்க விட்ட கவிதைகள்

ஒன்று


(Picture by cc licence, Thanks Shadowgate)

றந்த வீட்டிற்கு
வந்தால்தான் என்ன?

ட,
வந்தவர்கள் சொல்லிக் கொண்டு
போனால்தான் என்ன?

றந்தவரோடு
சேர்ந்து கொண்டு
வந்தவர்களுமா சாகடிப்பார்கள்?

***

இரண்டு


(Picture by cc licence, Thanks Ajay Tallam)

னக்கு உண்ணிங்கிற பெயர்
ஏன் வந்துச்சுன்னு தெரியல என
வருந்தி சொல்லிக் கொண்டிருந்தான்
அரிக்கிட்டு.

ல்லவேளை,

ரிக்கிட்டுங்கிற பெயர்
எப்படி வந்தது என
கேட்க இருந்தேன்.


Wednesday, September 1, 2010

பூச்சாண்டி கவிதைகள்

தெரிஞ்ச பூச்சாண்டி


(Picture by cc licence, Thanks Phoenix2k)
ட்டானை
ஹெலிகாப்டர் பூச்சியென
முதலில் அறிந்தேன்.

ட்டானை
தட்டான் எனவும்
அறிந்தது உண்டு.

போறான் பாரு,
வாலில் நூல் கட்டிய பொறம் போக்கு
என அறிந்திருக்கலாம்
தட்டானும் என்னை.

பொறம் போக்கே ஆனாலும்
பூச்சியே ஆனாலும்
பரஸ்பரம் அறியப் படுதலில்
ஒரு மகிழ்ச்சியே பூச்சி.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!

***

தெரியாத பூச்சாண்டி


(Picture by cc licence, Thanks Jinterwas )

நேற்றவள்
கனவில் வந்ததை
சொன்னேன்.

ன்ன சொன்னேன்?
என்றாள்.

யோசிச்சு சொல்றேன்
என்றவள் சொன்னதை
சரி என்றாய் என்றேன்.

சிரித்தாள்.

ண்டுபிடித்து விடுகிற
போதெல்லாம் சிரிப்போமே அப்படி.

***