Monday, November 30, 2009

புரிதல் காலம்


(Picture by CC licence, thanks Paromita)

ல்லாத்தையும் மறந்துட்டு
சந்தோசமாய் இருக்கணும்
என்ற போது புரியாமல் இருந்தது
புரியுதா என்ற போது
கண் கலங்கியது.
**
போக போறது
புறப்பட்டது எல்லாம்
சொல்லக் காணோம்.
போகும்போது சிரித்தது
புரியக் காணோம்.
**
குழந்தையோடு பேசி கொண்டே
ஜன்னல் திறந்தாள்.
போய் கொண்டிருக்கும்
பூச்சாண்டி புரிந்ததும்
மூடிக்கொண்டாள்.

Thursday, November 26, 2009

ஒலியும் ஒளியும்


(picture by CC licence, thanks Mark)

ஒன்று.
ன்னை மறந்ததேன்
தென்றலே என
எங்கேயோ பாடிக்கொண்டிருக்கு.
இக்காரணம் போதும்
சிகரெட் புகைக்க எனக்கு.

(picture by CC licence, thanks RBerteig)

இரண்டு
க்கத்துப்பள்ளி
ஒன்னுக்கு மணி சத்தத்தில்
இங்கு ஓடிப்பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கிறது
ஒரு நிழலை ஒரு அணில்.


(picture by CC licence, thanks Babasteve)

மூன்று.
ன்னல் வழியாக
பார்த்துக்கொண்டிருந்தாள்
காலைக்கோலத்தில் சிந்திய
சைக்கிள் மணி சத்தத்தை.

நான்கு.
குடமுழுக்கு விழாவும்
நீராட்டு விழாவும் வேறு வேறு
என அறிந்த போதே
சத்தமில்லாமல்
பரு வந்தது.

ஐந்து
காப்பா வந்துட்டாங்களா
சத்தம் கேட்டுச்சு என
வருவார்கள் கவிதாம்மா.
"எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?"
கிசு கிசுத்தென்னை
முறைப்பாள் மகாம்மா.

Tuesday, November 24, 2009

நிஜம்



ர்ஸ் எடுத்து
வைத்து கொண்டாள்.

மொத்த சேலைகளையும்
கூடைப்பையில் திணித்து கொண்டாள்.

பாவாடை பிரிலை
அவசரமாக உள் நுழைத்தாள்.

குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.

விளக்கு பொருத்தி
சாமி பார்த்தாள்.

ண்ணீர் பெருக்கெடுத்தது.

தவு பூட்டி
சாவி எடுத்தாள்.

வன் வந்து கொண்டிருந்தான்.

வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.

திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.

Sunday, November 22, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-5


(picture by CC licence, thanks sugar_pond)

ஒன்று
தத்து
நொறுங்குகிறது
கூடுதல் கவனத்துடன்
குழந்தையின்
வெறுங்காலடியில்
ஒரு சருகு

இரண்டு
கிஞ்சித்தும்
முயற்சி இல்லை
அவளை நினைக்க
என நினைக்க
ப்ரியமாய் இருக்கிறது.

மூன்று
லை துவட்டி
உதறிய துண்டிலிருந்து
வானவில் மிதந்தது.
அடச்சே...இது
இவ்வளவு நேரம்
தலையிலா இருந்தது?

நான்கு
"போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?

ஐந்து
ருந்து வச்சு
கட்டிய இடத்தில்
வின்,விண்ணென்று
தெறிக்கிறது
செவிலியின் ரூபம்.

பா.ராஜாராம் கவிதைகள்-4
பா.ராஜாராம் கவிதைகள்-3
பா.ராஜாராம் கவிதைகள்-2
பா.ராஜாராம் கவிதைகள்-1

Thursday, November 19, 2009

மரண அடி


(picture by cc license, thanks Julien Harneis' photostream )

வூட்டுக்கும் மாமா வூட்டுக்கும்
நடுக்கோண்டு ஒத்தடிப்பாதை.

புடிச்சுப் போனா
மாமா கொல்லை.

போச்சொல்ல போச்சொல்ல
நாயுருவி அப்பும்.

கொல்லையில் கெடக்குற மாமாக்கு
குடும்பம் குட்டி இல்லை.

த்தடியில் படுத்தது பொறவு
பத்தடி ரோடு.

நாயுருவியும் மாமாவும் இப்ப
மருந்துக்கும் இல்லை.

த்தடி வரும்போது
எம்பூட்டுக்குங்க
ரெண்டு ஒத்தடி.

Wednesday, November 18, 2009

புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு

ண்பர் மணிஜியிடமிருந்து அழை எண் பெற்று கேபில்ஜியை தொடர்பு கொண்டேன்.

"டம்புக்கு சரி இல்லைன்னு விஷயம் கேள்வி பட்டுதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக கார எடுத்துட்டு போறேன் தல. சட்டையை போட்டவர் சோபாவில் உட்கார்ந்தார். அப்படியே collapse ஆய்ட்டார். சகோதரி கணவர் கூட காலையில்தான் துபாய் போறார். பிறகு விஷயம் கேள்வி பட்டு உடனே திரும்புற மாதிரி ஆயிருச்சு. மருமகன்னா உயிர் இவருக்கும். எண்பது, நூறு பேரு இருக்கும் தல. நம்மாளுங்க. வந்து நின்னு, எல்லாவேலைகளையும் இழுத்து போட்டு பார்த்தாங்க. யாருன்னே தெரியாது. முகம் கூட பார்த்தது இல்லை. எங்கிங்கிருந்தோ எவ்வளவோ போன் கால்கள். என்ன செய்ய போறேன் தல, இவுங்களுக்கெல்லாம்?" என்று தத்தி,தத்தி,வெயிலிலும் மழையிலும் அமர்ந்து கொண்டு இருந்தது அவர் குரல். முதல் முறை கேட்க்கிற குரல். சம்பவமும், சூழலும் அடைத்து, அப்பா மேலான பிரியம் மட்டும் ஒழுகி கொண்டே இருந்தது அவர் குரலில்.

ப்பா என்பவர் அப்பா மட்டும்தானா? எவ்வளவு நிகழ்வு, எத்தனை நாள், எவ்வளவு இரவு, எத்தனை பிணி, எவ்வளவு சந்தோசம், போதனை, கல்வி, சிரமங்கள், எவ்வளவு மீசை குத்திய முத்தங்கள், இன்னும் எவ்வளவு எவ்வளவு இந்த அப்பா? போனை வைத்ததும் சொல்லொண்ணா அடர்த்தி கவ்வி கொள்கிறது. ஒரு சரித்திரம் ஒரு நொடியில், ஒரே ஒரு நொடியில் முடிந்து போய் விட முடியுமா? கேபில்ஜியின் முகம் பார்க்காத அப்பாவிடமிருந்து நினைவு தப்பி அப்பாவிடம் வருகிறது...

ப்பா என்றொரு மக்கா.

கோவையில் இருந்து திரும்பி கொண்டு இருந்தோம் அப்பாவும், நானும். ஆரப்பாளையம் இறங்கி, அண்ணா பஸ்ஸ்டாண்ட் வந்துதான் சிவகங்கை பஸ் மாறனும், அப்போ. அண்ணா பஸ் ஸ்டாண்ட் வந்ததும் அப்பா கேட்டார்,

"ம்பி அம்பது ரூபா வச்சுருக்கியாடா?" (ரொம்ப rare-ஆதான், இந்த"தம்பி"யை யூஸ் பண்ணுவார் அப்பா)

"ருக்குப்பா. என்னப்பா?" என்றேன்.

"தா"என்று வாங்கி கொண்டு நடந்தவர் நாலு அடி நடந்திருப்பார். திரும்பி என்னை பார்த்தவர் "வாடா"என்றார். பின்னாலேயே நானும் போனேன்.

ருகில் உள்ள ஒயின்ஸ் சாப்பிற்குள் அப்பா நுழைவதை பார்த்ததும் நின்றுவிட்டேன். உண்மையில் நான் உணவருந்த போகிறார் போல என்பதாகத்தான் பின் தொடர்ந்தது. "சரிதான்" என சிரித்துகொண்டு, அருகில் ஒரு மரியாதை நிழல் இருந்தது. வேம்புக்கெனவே வாய்க்கிற மரியாதை நிழல்! நிழலில் நின்று கொண்டேன் நான். அப்படி நிற்கிற என் மரியாதையும் பிடித்திருந்தது.

யின் சாப்பில் ஒரு குவாட்டரை பிடித்துகொண்டு, பக்கத்தில் உள்ள பாருக்குள் நுழைந்தார் அப்பா. இரண்டு நிமிடத்திற்கும் குறைவில் பாரில் இருந்து வெளிப்பட்டார். வாயை துடைத்து கொண்டே வந்தவரின் கையில் உரித்த வாழை பழம் ஒன்று இருந்தது. பாதியை வாயில் போட்டுக்கொண்டு மீதியை என்னிடம் நீட்டினார்.

"னக்கு வேணாம்ப்பா நீங்க சாப்பிடுங்க" என்றேன்.

"முண்டை, புடி. பாருக்குள்ளே போயி ரைட்ல திரும்பு. பாதி வச்சுட்டு வந்திருக்கேன். பார் பயல்ட்ட உன்னை காமிச்சு சொல்லிட்டு வந்திருக்கேன்." என்றவர் என் முகத்தை கூட பார்க்காமல், விடு, விடுவென பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க தொடங்கி விட்டார்.

னக்கு பெரிய அதிர்ச்சி. நான் தண்ணி அடிப்பது அப்பாவிற்கு தெரியும். அப்பாவிற்கு தெரியும் என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் அப்பா இல்லையா? தண்ணியில் இருக்கும் போது அப்பாவை பார்த்ததும் தெறிப்பதும், புகைத்து கொண்டு இருக்கும் போது, அப்பா வந்து விட்டால்,சிகரெட்டை எறிவதும் பயமோ, மரியாதையோ சம்பந்த பட்டது மட்டுமில்லை. இப்படியெல்லாம் இருக்க பிடித்தும்தானே வருகிறது.

"ன்ன வெயில்டா.." என்று நண்பனுடன் பேசி கொண்டே சட்டை பட்டனை தளர்த்துகிற போது, கையிலிருக்கிற தினசரி கொண்டு நமக்கும் சேர்த்து விசிறுகிற நண்பனை போல், சுளுவாய் அப்பா மற்றொரு கதவை திறந்து தந்தார். அப்பாவிற்கும் எனக்குமான நீர்பாசன கதவை!

ர் வந்ததும் நண்பர்களிடம் சொல்லி சிரித்தேன். பிறகு வந்த காலங்களில் ஒரு சிப் உள்ளிறங்கியதும், tvs-50 சாவியை நண்பர்கள் யாரிடமாவது கொடுத்து "அப்பாவை போய் கூட்டிட்டு வாங்கடா" என்பேன். அப்பா வந்ததும் ரெண்டாவது ரவுண்டு தொடங்கும். நண்பர்கள் எல்லோரையும் அப்பா "சித்தப்பு" என்றுதான் அழைப்பார். (மகன்,அசோக்..உங்களிடம் மிக நெருங்கியதற்கு மன ரீதியான இவ்விளிப்பே காரணமாய் இருக்கலாம் எனக்கு). பசங்கள் எல்லோரும் "அப்பா" என்றழைப்பார்கள்.

ல்லா கிளாசையும் வட்டமாக அடுக்கி நிரவி ஊற்றுவது அப்பாவாகவே இருக்கும் பெரும்பாலும். நண்பர்களில் சூரி அண்ணனும், முத்துராமலிங்கமும் அப்பாவிற்கு மிக நெருக்கம். நண்பர்கள் எல்லோரும் ரவுண்டு கட்டி அமர்ந்து தண்ணி அடித்தாலும், நான் மட்டும் அப்பாவின் "முன்பாக" என அருந்துவது இல்லை. மூர்த்தி கடையில் ஒரு திரை இருக்கும். திறந்து மூடவென. திரையை இழுத்துவிட்டு பின்புறமாக நின்று கொள்வேன். முத்துராமலிங்கம் என் கிளாசை கொண்டுவந்து திரைக்குள் தருவான். சத்தம் பறியாமல் உறிஞ்சி கொள்வேன்.

"நீ தண்ணி அடிக்கிறேன்னு தெரியும். இங்க அடிச்சா என்ன. திரைக்கு பின்னால் அடிச்சால் என்னா, உக்காந்து அடிடா முண்டைக்கு மாரடிச்ச்சவனே" என்பார் அப்பா.

நான் சிரித்த படியே வெளியே தம் அடிக்க இறங்கி விடுவேன். ஒருமுறை தம் முடிச்சு சபைக்குள் நுழைய அப்பா எதிரில் உட்க்கார்ந்திருக்கிற முத்துராமலிங்கம் கையில் சிகரெட் புகைந்து கொண்டு இருந்தது. எனக்கு சுரீர் என்றது. அவன் கையிலிருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியில் எரிந்து விட்டு வெளியில் வந்து விட்டேன்.

பின்னாடியே வந்த முத்துராமலிங்கம் "என்ன மாமா?" என்றான்." என்ன, நொண்ண மாமா? ஒங்கூட உட்கார்ந்து தண்ணி அடிக்கிறார் என்பதற்காக அவரோடு உட்கார்ந்து தம் அடிப்பியா?" என்று கடித்து வைத்தேன். இப்பவும் எனக்கு இந்த சைக்காலஜி புரியவில்லைதான். ஆனால் புடிச்சிருக்கு. புடிச்சிருக்கும்படிதானே வாழவும் முடியும்.

ப்பாவிற்கு எல்லாம் ஒண்ணுதான். முன்னாடி, பின்னாடி எல்லாம்!

ராஜா, சூரிஅண்ணன், pcரவி அண்ணன், முத்துராமலிங்கம், மகந்தா, மதி, மூர்த்தி, அமரன்கார்த்தி, குண்டுகார்த்தி, டூல்ஸ்முத்து, நாகேந்திரன், செட்டி, ஜெயா, காலீஸ், எல்லாம்!!

விரிந்த வெளிகளில் அப்பா வாழ்வை சிந்திக்கொண்டே போனார். வெள்ளை பேப்பரில் சிந்திய மை நாலாய் மடித்தால் ஒரு சித்திரமும் எட்டாய் மடித்தால் மற்றொரு சித்திரமும் வருவது போல், சித்திரம் சித்திரமாக சிந்திக்கொண்டே போனார். பிறகு சிந்தியும் போனார்.

றவினர்கள் யாராவது அம்மாவிற்கு இதை வாசித்து காட்ட கூடும். "அப்பா பற்றி எழுத உனக்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லையாடா" என வெட்கி புன்னகைப்பாய் அம்மா, நீ.

ருக்கட்டும் அம்மா. இந்த முகம் நீ பார்க்கலைதானே? பார்த்துக்கோ!

து எல்லாம் சேர்த்துதான் அப்பா, அம்மா.

ப்பா என்றொரு மக்கா, அம்மா!

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று

Monday, November 16, 2009

அளவெடுத்தது 'அவன்'


(picture by cc license, thanks DavidDennisPhotos. com's )

நீங்கள் அணிந்திருக்கிற
அளவு சட்டையில் இருந்து
அளவெடுப்பதே
அவன் கணக்கு.

யிர்க்கால் அளவு
கூடிப்போகும்.
சிலநேரம் குறையலாம்.

ளவெடுக்கும்போது
உள்ளிழுத்து வெளியனுப்பும்
உங்கள் மூச்சு காற்றின்
நுண்ணிய அளவீடுகள்
அவன் இன்ச் டேப்பில்
சிக்குவதில்லையெப்போதும்

கை பிசைந்து நிற்கிறான்
அவன் தவறோவென.

பெரிய மனசு கொண்டவரே..

ல்லை என சொல்லி வாருங்கள்.
அல்லது
ஆம் எனவாவது.

பாவம்
பதில் தெரியாது தூங்க மாட்டான்
சிற்பியையொத்த தையற்காரன்.

Saturday, November 14, 2009

எம்.ஜி.ஆர்.



(picture by cc license, thanks justinmaier's photostream
)


புருஷன் பொண்டாட்டி
சண்டை போல.
பெரிய கூக்குரல்.

குழந்தை குட்டிகளின்
அலறல் வேறு.

"தே பொழப்பாப்போச்சு இதுகளுக்கு"
என இவளும் சலிக்கிறாள்.

டிப்பதை நிறுத்திவிட்டு
முகம் பார்க்கிற என்
குழந்தைகளின் முகத்திலும்
சொல்லொண்ணா கலவரம்.

னி,
அப்பாவாக வேணும் நான்.

ழுந்து சென்று
ரெண்டு தட்டு தட்டுகிறேன்.

மூச்சுப்பறியக்காணோம்
குருவிக்கூண்டில்.

Wednesday, November 11, 2009

ஐந்து காசு கவிதைகள்


(picture by cc license, thanks granwoman's photostream )

ன்று:

கோயில் வாசலில்
சாமி விற்கிறான்.
காசுக்கு மனிதன்.

ரண்டு:

புட்டு விற்கிற
ஆச்சிக்கு பசி.
புட்டு இருக்கு.
காசு திங்க வேணாம்
ஆச்சிக்கு.

மூன்று:

பொட்டு சரியாவென
கேட்க்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம்.

நான்கு:

பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்க்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை.


ந்து:

மகள் சடங்கிற்கு
ஆயிரத்து ஒன்னு எழுதியவர்
பத்திரிக்கை வைத்தார்.
வெட்கமாய் இருக்கிறது.

Monday, November 9, 2009

புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று

"ரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது" என்று நண்பன் குமார்ஜி சொல்வான். எனக்கு மனிதர்கள்!...

நான் சந்தித்த மனிதர்களை இந்த தலைப்பின் கீழ் பதியலாம் என்பதாக யோசனை. கை எட்டும் தூரத்தில் இம்மனிதர்களை அடுக்கி வைத்துக்கொண்டு, சாய்வு நாற்காலி காலங்களில் இவர்களை தட்டி எடுத்து பார்த்துக்கொண்டோ, இவர்களுடன் இருந்த காலங்களை அசை போட்டபடி கண்மூட எதுவாக இருக்கலாம் எனக்கு. இதை என் பார்வைக்கு எனவே தயார் செய்கிறேன். இவர்களை நீங்களும் அறிவீர்கள் எனில் எனக்கு ஒரு குறையும் இல்லை.

வுதியின் என் அடர்த்தியான நிகழ்வுகளில் இருந்து எனக்கென ஒரு சாளரத்தை திறந்து தந்தார்கள், ரமேஷும் கண்ணனும். பெயர் கருவேலநிழல் என்றாக்கிக்கொண்டேன். இச்சாளரம் வழியாக நான் என் முதல் மனிதனை தேடி எடுத்து கொண்டேன். அவர்..

முதல் நிழல் என்ற S.A.நவாசுதீன்!

பின்னூட்டம் வழியாக அறிமுகமாகி, அலை பேசி மூலமென அடிக்கடி பேசிவருகிற நண்பர்கள், இந்த நவாஸ், ரவுத்திரன், தமிழன் கறுப்பி, சரவணா என ஒரு குட்டி உலகத்தை நான் இங்கு ஸ்ரிஷ்டித்து கொண்டேன். பெரும்பாலும் இவர்கள் எல்லோருமே ஜெத்தாவில்தான் இருக்கிறார்கள். சரவணா மட்டும் இங்கு. ஜெத்தா இங்கிருந்து 1300.கி.மீ. எனக்கு இளவரசர் ஒருவருக்கு பசியாற்றுகிற வேலை. முதலாளி எங்கு போனாலும் நானும் போகவேணும். அப்படி ஜெத்தா போக நேரிட்ட போது...

ஜெத்தா இறங்கி அறை அடைந்ததும் நவாஸை தொடர்பு கொண்டேன். "நாளை மாலை என்னுடன் தங்கும்படி உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்" என்றார் நவாஸ். அவர் சொன்ன நாளை மாலையும் வந்தது. குரல் வழியாக தடவி ஏற்றுக்கொண்ட மனிதனின் முகம் பார்க்க போகிற உற்சாகம் எனக்கு. அலை பேசியில், எங்கு சந்திக்கலாம் என திட்டம் வகுத்து தந்திருந்தார் நவாஸ்.

"புறப்பட்டேன், வந்துகொண்டு இருக்கிறேன், கிளம்புங்கள், சரியாக இருக்கும்" என என்னை நகர்த்திக்கொண்டே இருந்தது அவர் குரல். என்னுடன் பணி புரிகின்ற ராதா சேட்டா, இந்த கதைகளை எல்லாம் கேட்டு நம்ப முடியாத சுவராசியத்துடன் "நானும் வரவா ராஜா?" என்றார். "வாங்களேன்" என கூட்டிக்கொண்டேன். நவாஸ் குறிப்பிட்ட இடத்தை நானும் ராதா சேட்டாவும் நெருங்கிகொண்டிருந்தோம். மீண்டும் அலை மணி.."கோடு போட்ட டீ ஷர்ட்டா நீங்கள்?" என்று துணுக்காக தூக்கினார்."வலது புறம் திரும்புங்கள்" இதுதான் கடைசியாக அலைவழி குரல் அவருடையது. திரும்பினால், கார் நின்று கொண்டு இருந்தது. அருகில் கை உயர்த்திய நவாஸ்!

றக்க தொடங்கினேன் நான். காரைவிட்டு வேக, வேகமாக நடந்து வந்த அவரும் ஒரு புள்ளியாக கட்டி இறுக்கிக்கொண்டார்..முதல் சந்திப்பில் இவ்வளவு நெருக்கமான ஒரு தழுவுதலை உணர்ந்த நாள் இதுதான். அப்படி ஒரு சிரிப்பும் தளும்புதலும் நவாசிடம்! குரல் வழியாக எனக்குள் இருந்த நவாசின் சித்திரத்துடன் செய்து வைத்தது போல் பொருந்திக்கொண்டார், எதிரில் நின்ற நவாசும்!. பத்து நூறு வருடம் பழகியது போல் அப்படி ஒரு வாஞ்சை.

வுதி வந்து இந்த ஏழெட்டு வருடத்தில் முற்றிலும் ஒரு புதிய நாளை, முற்றிலும் பசுமையான மரத்தில் இருந்து பறித்து வைத்திருந்தார் நவாஸ் அன்று! சல,சல,வென பேசியபடி அவர் வீடடைந்தோம். பெரிய வீடு அது. மொட்டை மாடியில் இவர் அறை. விசாலமான தனி அறை. அறைக்கு வெளியே,பெரிய செட், நிழலுக்கு, வெயிலுக்கு என...எனக்கு அந்த அறை ரொம்ப பிடிச்சு இருந்தது. கண்விழித்ததும் பார்க்கும் படியாக குழந்தைகளின் புகைபடம் மாட்டி இருக்கிறார். படுக்கையில் இருந்தபடி நீட்டுகிற அப்பாவின் கரங்களுக்கு தாவ தயாராக நிற்கிறார்கள் நதீமும் நூராவும்!

ண்பர்களுக்கு தன் வாழ்வில் பெரிய இடம் வைத்திருக்கிறார் நவாஸ்! புகை படங்களை காட்டி நண்பர்கள் பற்றி பேசும் போது முகத்தில் வெளிச்சம் பரவுகிறது. ஜமால், அபுஅப்சர், பாலா, சபிக்ஸ், செய்யது, தமிழரசி என நிறைய வலை உலக நண்பர்களை நெருக்கமாக வைத்திருக்கிறார். இவர்களை பற்றி பேசும் போது இவர்களை அப்படியே நமக்குள்ளும் இறக்குகிறார். கிட்டத்தட்ட ஏழுமணிநேரம் என்னென்னவோ பேசிக்கொண்டு இருந்தோம்.

டையில் ராதா சேட்டா என்கிற ஒரு மனிதர் இருப்பதையே மறந்து போனேன் நான். நவாஸ்தான் அவரையும் காபந்து பண்ணிக்கொண்டார். சரளமாக மலையாளம் பேசுகிறார் நவாஸ். "சுத்தமான மலையாளம் ராஜா" என இப்பவும் புலம்புகிறார் ராதா சேட்டா! எங்களை காண வரும் போதே உணவுகளையும் தயாராக வாங்கி வந்திருந்தார். மனசு நிறைந்து இருக்கும் போது உணவும் வாசனையாக இருக்கிறது. நன்கு ருசித்து பசியாறிக்கொண்டேன். நாங்கள் கிளம்ப வேண்டிய சாயல் பார்த்ததும் "எங்க கிளம்புறீங்க...தங்கிட்டுதான் போறீங்க... விளையாடுறீங்களா...?" என்கிற குழந்தை தனத்தையும் கொண்டு இருக்கிறது அவர் முகம்!

"வீட்ல வந்து கொஞ்ச நாள் இருந்தாங்க ராஜா”, நம்ம வேலையா போறோம், எப்ப திரும்புறோம் என சொல்ல முடியாது. நாலு சுவத்துக்குள்ளேயே கிடப்பாங்க. நம்ம சுயநலத்துக்காக அவுங்களையும் இப்படி அடைக்க மனசு வரலை" என்று பேசுகிற, யோசிக்கிற மனசை வைத்திருக்கிறார் மனுஷன். அதாவது மனிதன்!

வாஸ் மக்கா...

ங்களை, அவ்வீட்டை, நண்பர் ரம்ஜானை, அந்த மொட்டை மாடியை, இது வீடுதான் என உணர்த்தவென ஒரு தட்டில் காய்ந்து கொண்டிருந்த மீந்த சோற்றை, தலையுரசி பறந்த விமானங்களை, வாசலை, பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த காய்க்காத அந்த மாமரத்தை பொதிந்து வைக்கிறேன். இதை இங்கு இப்படி பொதிய இந்த மாமரமே காரணமாகிறது.

"நான் வந்த காலம் தொட்டு இந்த மரம் காய்க்கவே இல்லை"என்று வாசலில் வைத்து சொன்னீர்கள் நினைவு இருக்கா? அந்த ஒரு வார்த்தை, அந்த தருணம் அங்கிருந்து நான் இன்னொரு வீடடைந்தேன். அங்குதான் இருக்கிறார்கள், என் மீனா அத்தையும் சின்னப்பன் மாமாவும். அந்திமகாலம் வரையில் தன் குழந்தை வாசனை முகராத மீனா அத்தையும்,சின்னப்பன் மாமாவும்!

னி, அவர்களை காணும் போது இந்த மாமரத்தையும் நினைத்து கொள்வேன்...எனில், இந்த அனுபவம் தந்த உங்களையும்!

தீம், நூராவுக்கு என் அன்பு நிறைய!

Saturday, November 7, 2009

கௌலி


இந்த படம் தந்துதவிய திரு.பாலா அவர்களுக்கு நன்றி

நிராசையில் மரித்த
கன்னி தெய்வம்
தலைமாடு காத்து வருகிற
கதையொன்றை
சொல்லிக்கொண்டிருக்கிறான்
குடுகுடுப்பை.

தைகளையும் மீறி
அடர் நிசியின்
அறுபட்ட தொண்டையிலிருந்து
சொட்டிட்டு கொண்டிருக்கிறது...

ரு குடுகுடுப்பையின்
வாழ்வு.

Thursday, November 5, 2009

பிடித்தது,பிடிக்காதது-பத்து

ண்பர் மாதவன் தொடங்கிய விளையாட்டு இது. சும்மா கிடக்க மாட்டேங்கிராருங்க சாத்துறார்! இதுல,"பிடிக்காதவர்களை சொல்வதற்கு இங்கு தைரியம் வேண்டியதிருக்கிறது" என்று கொம்பு சீவல் வேறு. நல்லா இருங்கப்பு! நம்ம பப்பு ஆச்சி முல்லையும், நூரா அத்தா நவாசும் கூப்பிட்டு இருக்காங்க.

ரி,நம்மளும் முட்டித்தூக்குவோம்.

விதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி!

விதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

விதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

நான் இங்கு இருவரை தேர்கிறேன். இணையான என எடுக்கலாம். வாங்க போவோம். படம் போட்டாச்சு.

1.ரசியல்வாதிகள்

பிடித்தது, கக்கன், நல்லகண்ணு.
பிடிக்காதது,ஜெயலலிதா, ராமதாஸ்.

2.ழுத்தாளர்கள்

பிடித்தது, தி.ஜா, வண்ண நிலவன்.
பிடிக்காதது, ராஜேஷ்குமார், சிவசங்கரி.

3.விஞர்கள்.

பிடித்தது, கல்யாண்ஜி, நேசமித்ரன்.
பிடிக்காதது, வைரமுத்து, மு.மேத்தா.

4.டிகர்கள்.

பிடித்தது, கமல், சூர்யா.
பிடிக்காதது, ராமராஜன், மோகன்.

5.டிகைகள்.

பிடித்தது, சாவித்ரி, த்ரிஷா (நடிக்க வேணாம். அப்படியே சாப்பிடலாம்).
பிடிக்காதது, பானுமதி, சரளா.

6.யக்குனர்கள்

பிடித்தது, மணிரத்னம், பாலா.
பிடிக்காதது, இராம நாராயணன், பாலச்சந்தர்.

7.சை அமைப்பாளர்கள்

பிடித்தது, இளைய ராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்.
பிடிக்காதது, தேவா, குன்னக்குடி.

8.விளையாட்டு வீரர்கள்

பிடித்தது, ஸ்ரீகாந்த், பாலாஜி.
பிடிக்காதது, எவ்வளவு யோசித்தாலும் தமிழ் நாட்டில் யாரும் இல்லையே,மக்கா.

9.ர்கள்

பிடித்தது, சிவகங்கை, மதுரை.
பிடிக்காதது, சென்னை, கருப்பாயி ஊரணி(ஏதாவது சொல்ல வேண்டி இருக்கே..)

10.மையல்

பிடித்தது, அம்மா, லதா (எனக்கு இவுங்க பிரபலம்தான்!)
பிடிக்காதது, நம்பியார் சேட்டா, பா.ராஜாராம் (நான்,அம்மா,லதாவுக்கு பிரபலம்தானே!)
ஒஹ்! நம்பியார் சேட்டாவா? அவரும் பிரபலமே, எப்படி சமைக்க கூடாது என்பதில். விடுங்க மாதவன் முல்லை பெரியாறு பிரச்சினைக்கு, இந்த அட்ஜஸ்ட்மென்ட்டில் ஏதாவது தீர்வாகுதானு பாப்போம்.

ன்றி, மாதவன், முல்லை, நவாஸ்!

வாங்க,
ஹேமா,
விஜய்,
விக்னேஷ்வரி,
இன்றைய கவிதை,
ஸ்ரீ

Tuesday, November 3, 2009

தொடர் பதிவு5: தீபாவெளியில்..

து நம்ம அமித்தம்மா கூப்பிட்ட தொடர். நன்றி அமித்தம்மா!

தீபாவளி கொண்டாடுவதில்லை, மக்காஸ். சேலைக்காரி அம்மன், வீட்டு தெய்வம். இந்த அம்மனை குல தெய்வமாக கும்பிடுபவர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கொண்டாடுவதில்லை என்பது, எண்ணெய்க்குளியலும், சமையலும் இல்லை. மற்றபடி டிரஸ் எடுத்து, தைச்சு, நனைத்து வைத்து விடுவோம். "ஒன்னும் கோடியாக அணியலையே..." என நைசாக அம்மனை ஏமாற்றி விடுவோம்.

"கள் கொண்டாட மாட்டாளே" என வீராயீ அம்மாச்சி வீட்டில் இருந்து வருகிற முறுக்கு, அதிரசம், வாசனை நிரம்பிய வெள்ளாட்டுக்கறி நாக்கு தாண்டி இன்னும் புத்தியில் இருக்கு. அம்மாச்சி இடத்திற்கு, பிறகு சரசத்தை வந்தார்கள். (லதாவின் அம்மா!) முறுக்கு, அதிரசம், வெள்ளாட்டுக்கறி பாரம்பர்ய வரத்து போல!

தீபாவளி அன்று பார்க்கிற அம்மா, லதா, அழகாய் இருப்பார்கள். எண்ணைச்சட்டி இல்லாமல், அடுக்களை நுழையாமல், வருகிற பலகாரங்களை பகிர்ந்து கொண்டு... லதா வந்த பிறகு தீபாவளியில் சற்று மாற்றம். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே "சேம் பின்ச்" பண்ண, சேம் அதிரசம், முறுக்கு செய்து வைத்துக்கொள்வாள். கேட்டால், "பலகாரம் கொடுத்துட்டு வெறும் தட்டோடு அனுப்ப வேணாமே" என்பாள். "சரி..திருப்பி கொல்லு.." என்பேன். பழிக்கி பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்கிற லதா! சரி மேட்டருக்கு போவோம்..

1.உங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு?
குறிப்பு, பா.ராஜாராம்-தான். சிறு குறிப்பு என்பதால், நீங்கள் ப்ரியமாய் தரும் பா.ரா-வும்!

2.தீபாவளி என்றதும் உங்கள் நினைவுக்கு வரும்(மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
மற்றொரு சம்பவம்தான் நினைவுக்கு வருது. ஆனால், அமித்தம்மா, "பால்யத்தில் உங்கள் தீபாவளி பற்றி.." என விரும்புகிறார்கள். சரி,.. அதையே பார்ப்போமே.

ஆறேழு வயதிருக்கும் என நினைவு... தீபாவளி மதியம் அது. பட்டாசெல்லாம் தீர்ந்து போய் விட்டது. எப்பவும் கடைசியாக மிஞ்சுவது கலர் தீப்பெட்டி மத்தாப்பே. அதை தொடுகிறோம் எனில் அவ்வளவுதான் தீபாவளி என ஒரு வலி வரும் பாருங்கள் .. சொல்லி மாளாது..

வானியங்குடி குடிசை வீடு. வாசலில் நின்றபடி தீப்பெட்டி மத்தாப்பு கொளுத்தி மேலே வீசினால் ராக்கட் மாதிரி போய் திரும்புகிற விளையாட்டை கற்றுக்கொண்டிருந்தேன். ராக்கட், லேண்டிங்கில் பிரச்சினை ஆகி, கூரையில் சொருகிக்கொண்டது! கொஞ்சம் நேரம் ஒன்னும் புரியலை... புகை இருந்தால் நெருப்பிருக்கிற கிசு கிசு மாதிரி கூரையும் பற்றிகொண்டது. ஊர்ஜிதம்!

இனி, பிழைப்பில்லை என்று அறிந்ததும் நலுக்குப்படாமல் வீட்டிற்குள் போய்விட்டேன் (உச்சி கொப்பில் அமர்ந்து கொண்டு அடிக்கொப்பை வெட்டுகிற சாதுர்யம் எனக்கு ஆதியிலேயே இருந்திருக்கு என இவ்வரலாறு எழுதும்போது உணர வாய்க்கிறது..). கூரை வீட்டு ஹாலில் ஒரு மூலை இருக்கும். அங்கு அமர்ந்து விட்டேன் எனில் ’சரண்டர்’ என்று அர்த்தம். இதை அம்மாவும் அறிந்திருப்பாள் போல.

கை வேலையாக வந்த அம்மா பொசிசன் பார்த்து, "என்னடா?" என்றாள். "ஒன்னுமில்லையே..." என்பதாக மண்டையை உருட்டினேன். இப்படி கன்னம் அதிர மண்டையுருட்டினால் "ஒன்னு" இருக்கு என்பதையும், இந்த அம்மாக்கள் எப்பவும் அறிகிறார்கள்தான்!... "என்ன பண்ணிட்டு வந்த?" என்று அம்மா கேட்பதற்கும், வெளியில் இருந்து "குய்யோ முறையோ" என குரல் வருவதற்கும் சரியாக இருந்தது.

நாலைந்து ஓலையோடு வீடை காப்பாத்தி விட்டார்கள், ஊர்க்கார்கள். எள் என்றால் எண்ணையாக நிற்கிற ஊர்க்கார வெண்ணைகள்! அமளியோடு, அமளியாக " கூண்டோடு கொளுத்த தெரிஞ்சுச்சே, தலையுருட்டி" என்று அம்மா, தொடையில் ஒரு பிடுங்கு வைத்தாள். தொடைக்கறின்னா அம்மாவிற்கு உசுரு.

3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?
சவுதியில்.

4.த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?
பேஷா! வழக்கமாக வருகிற போன் கால்கள் கூட வரலை. நானும், யாரையும் கூப்பிடலை. நண்பர் நவாஸ், சரவணகுமார் இங்கிருந்து கூப்பிட்டார்கள்!, நல்ல நாள், பெரிய நாளுக்கு வீட்டில் இருக்க முடியாத அழுத்தம் சற்று கூடுதலாக இருந்தது. வேலையை இழுத்து போட்டுக்கொண்டேன். its gone. போயே போச்சு!

5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?
புத்தாடைகள் இல்லை.

6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?
இங்கிருப்பதால் பலகார நிலவரம் தெரியவில்லை. சுற்றி, உறவுகள் நண்பர்களுக்கு குறை இல்லை... அதனால், குறை இல்லாமல் இருந்திருக்கலாம்.

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
சாதாரணமா தொலை பேசிதான்.இந்த வருஷம் யாருக்கும் கூப்பிடலை.

8.தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?
ஊரில் இருந்திருந்தால், எல்லா நண்பர்கள் வீட்டுக்கும் போய் புகைப்படம் எடுத்து கொடுத்திருப்பேன். (புகைப்பட தொழிலும் பண்ணிக்கொண்டு இருந்ததால்..) அன்று எல்லோருமே புது ட்ரெஸ் போட்டு வாசனையாக இருப்பதை பார்க்க ரொம்ப பிடிக்கும். மதியம் வரைக்கும் இந்த சுத்து. பிறகு நண்பர்களுடன் தண்ணி. மாலையில் குழந்தைகளுடன் மிச்ச பட்டாசு வெடிப்பு... ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.

9.இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
சிவகங்கையில் ஒரு அரசு பார்வையற்றவர்களுக்கான பள்ளி உண்டு. சவுதி வரும் முன்பிலிருந்தே அங்கு தொடர்பு இருக்கிறது.. நண்பர் கபிலனின் உதவி இதில் மிக பெரியது. அவர் அரிசி கொண்டு வருகிறார். நான் உமி கொண்டு வருகிறேன். ரெண்டு பேரும் ஊதி, ஊதி திங்கிறோம்!

10.நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அது எந்த நாடாக இருந்தாலும் ஒரே மாதிரி "தீபாவெளிதான்!"அதனால் மண்ணில் இருந்து இந்த வருடம் தீபாவளி எப்படி என கேட்க்கலாம்...
மாதவன், காமராஜ், தண்டோரா, தீபா... எழுதுங்க மக்கா.

அன்புடன்,
பா. ராஜாராம்