Wednesday, June 30, 2010

மதனும் ஆட்காட்டி விரலும் (வலைச்சரத்தில்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் நான்காம் நாள் - இங்கே சொடுக்கவும்

மதனும் ஆட்காட்டி விரலும்

நன்றி
பா.ராஜாராம்

Tuesday, June 29, 2010

வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும் (வலைச்சரம்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் மூன்றாம் நாள் - இங்கே சொடுக்கவும்

வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும்

நன்றி
பா.ராஜாராம்

Monday, June 28, 2010

நீர்க்கோல வாழ்வை நச்சி - ஒரு அனுபவம் (வலைச்சரத்தில்)

அன்பான நண்பர்களுக்கு,

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - இங்கே சொடுக்கவும்

நீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்

நன்றி
பா.ராஜாராம்

Sunday, June 27, 2010

வலைச்சரத்தில் - ஒரு வாரம்!

சரியாய் 20-வது வயது தொடக்கத்தில் அப்பா எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். கல்லூரி முடித்த கையோடு கல்யாணத்திற்குள் நுழைய நேரிட்டது. கல்லூரியில், மூன்று வருடமும் 400 மீட்டர், 110 மீட்டர், தடை தாண்டும் ஓட்டத்தில்(hurdles), மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி சாம்பியன். இதைக் கொண்டு, அழகப்பா பிசிகல் எஜுகேசன் கல்லூரியில் சீட் வாங்கலாம் என அப்பாவும், கோச் வேலாயுதம் சாரும் வற்புறுத்தினார்கள். "நாலு பொம்பள புள்ளைகளை வளர்த்தவண்டா. ஒரு புள்ளையை பார்க்க மாட்டனா? லதாபாட்டுக்கு வீட்ல இருக்கட்டும். நீம்பாட்டுக்கு படி" என்றார் அப்பா.

"நல்ல விளையாட்டாவுல இருக்கு" என்று கிருஷ்ணா மெடிக்கல்சில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இதுக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அப்பாவின் நண்பர் கணேசன் மாமாவிடம் கடனுக்காக போய் நின்ற போது, "ஒங்கப்பன் சம்பளம் வாங்கி வட்டியை கொடுத்துர்ராண்டா. திருப்பி வட்டிக்கு வாங்கி சம்பளம் மாதிரி கொண்டு வர்றான்" என்றார். போக, மனைவிக்கு வாங்கும் பூ என் காசாக இருக்க வேணும் என்பதும்தான்.

விளையாட்டை வாழ்வாக பார்த்த காலம் போய், வாழ்வை விளையாட்டாக பார்க்கிற காலங்கள் தொடங்கின. "டே.. டே.. ஒன் விளையாட்டுல நாங்களும் இருக்கோம்டா...கொஞ்சம் பார்த்து விளையாடு" என அவ்வப்போது லதா, குழந்தைகள் நிஜத்திற்குள் இழுத்து வருவார்கள். பிறகு நிஜம் விளையாட்டாக தொடங்கும். அதாவது நிஜ விளையாட்டு.! ரொம்ப குழப்புறனோ?... சும்மாதான், விளையாட்டுக்குத்தான்...

சரி, வந்த விளையாட்டை பார்ப்போம்..

"வாங்கப்பு... வந்து பொறுப்பெடுங்க" என சீனா சார் ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தை நம்மிடம் தருகிறார். (வலைச்சரத்தில் எழுதப் போறான்கிறத என்னா பில்டப் கொடுக்குறான்யா என்று மாது-காமு மாதிரியான அம்ப்பயர்கள் தேர்ட் அம்ப்பயரிடம் கட்டம் கட்டுவார்கள், பாவிகள்! :-)

எடுத்துட்டாப் போச்சு சீனா சார். அப்புறம், ரொம்ப நன்றியும் சார்!

ஆக, இந்த வாரம் நம்ம டாப் வலைச்சரத்தில் மக்கள்ஸ்! so, அங்க வந்துருங்க. ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்.

அட, வாங்க மக்கா..."இந்தா" இருக்குற தூரத்திற்கு வண்டி எடுத்துக்கிட்டு. காலாற பேசிக்கிட்டே நடக்கலாம்...

***

Monday, June 21, 2010

மகள் மகன் கதைகள்


(Picture by cc licence, Thanks cliff1066)

வெயிலடித்துக் கொண்டே
மழை பெய்தால்
நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் என்றாள்
மகள் ஒரு நாள்.

கேட்க நன்றாக இருந்ததால்
ஆகா எனக் கேட்டுக் கொண்டேன்.

ற வச்ச அரிசி தின்றால்
உங்க கல்யாணத்தன்னைக்கு
மழை பெய்யும் என்றாள்
மற்றொரு நாள்.

கேட்க நன்றாகத்தான் இருந்தது.
என்றாலும்
சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்.

**

மொட்டை மாடியில்
படுத்திருந்த நாளொன்றில்
மகனுக்கு நிலாக் கதையை
தொடங்கியிருந்தேன்.

ட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருப்பதால்
நிலாக் கதையொன்றும்
வேண்டாம் என்றான்.

சுட்டி சுட்டி எண்ணிய விரலில்
சறுக்கி இறங்கிய
நட்சத்திரங்கள்...

கனுக்கு சொல்ல நினைத்திருந்த
நிலாக் கதையை
எனக்கு சொல்லத் தொடங்கின.

Thursday, June 17, 2010

தெரியுமா?


(Picture by cc licence, Thanks Markles55 )

ஒன்று

றுக மூடிய கைகளை நீட்டி
"கைக்குள்ள என்ன சொல்லு பார்போம்?"
என்றாள்.

கைகளை தொட்டுத் தடவி
இன்னதென்றேன்.

ன்னது, இன்னது என்றேன்.

ருவேளை இன்னதோ என்று கூட
சொல்லிப் பார்த்தேன்.

"ண்ணுமே இல்லையே.." வென
கைகளை விரித்து
சிரித்துப் போனாள்.

ன்றுமே இல்லாததை
தொட முடிந்தது
அன்றுதான் தெரியுமா?

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


***

இரண்டு

ன்னைப் போல் உலகில்
ஏழு பேர் உண்டு தெரியுமா
என்றாள்.

தூக்கி வாரிப் போட்டது.

ன்னைப் போல் இன்னும்
ஆறு பேருக்கு
எங்கு போவேன்?


**

Friday, June 11, 2010

ஆச்சு மக்கா

ஆயிற்று.

இன்றுடன் நம் கருவேலநிழலின் முதல் ஆண்டு நிறைவுறுகிறது. எவ்வளவு நிறைவான, நெகிழ்வான முதல் வருடம்!

வேலை விட்டால் அறை. கொஞ்சம் டி.வி. நிறைய வீட்டு நினைவு. கொஞ்சம் அலை பேசும் சந்தோசம். கொண்டு, நிறைவுறும் குரல்வழி குடித்தனம்...இப்படியான பொழுதாக போய்க் கொண்டிருந்த போதுதான், இந்த கருவேல நிழலை தொடங்கி தந்தார்கள் தம்பியும், நண்பரும்.

தேற்றும் முகமாக, இங்குள்ள நண்பர்கள் சொல்வார்கள், "நாலு வெள்ளி முடிஞ்சால், சம்பளம். இருப்பத்தி நாலு சம்பளம் எடுத்துட்டா ஒரப்பாயிட்டு வீடுதான்" என்று.

இந்த பனிரெண்டு மாதமாக இது நிகழலை மக்கா.வெள்ளி வந்ததும் தெரியல. சம்பளம் வந்ததும் தெரியல. மாதாந்திர காலண்டரில், அனிச்சையாக நாட்களின் மேலாக குறிக்கிற இன்டு குறியீடு கூட இல்லை. (அனேகமாக இங்கு வந்தேறிகள் எல்லோரிடமும் இது உண்டு..இப்படி ரெண்டு காலண்டரை கிழித்தால் வீடு என்பதாக ஐதீகம். :-))

"என்னண்ணே என்ன பண்றீங்க?

"மக்கா நலமா?"

"மாமா நல்லாருக்கியளா?"

"சித்தப்ஸ்?"

"குரல் கேட்கணும் போல் இருந்தது, ராஜா சார்"

"யோவ்..என்ன மயிறு கவிதை எழுதுற?"

"நலமா பாரா?"

"வணக்கம் தோழர்"

"மகளுக்கு நிச்சயமாயிட்டுன்னு கேள்விண்ணே. என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? எதையும் யோசிக்க வேணாம்ண்ணே. கூடப் பிறந்த தங்கையா எடுத்துக்கோங்க. என்ன தேவைன்னாலும் கூப்பிடனும். கடன் வாங்கக் கூடாது. சரியா?"

என்றெல்லாம் திகைக்க வைக்கிற, நண்பர்கள் மற்றும் சகோதரிகள் குரல்கள்.

ஆம்,

நம் மகாவிற்கு ஒரு வரன் வந்தது.அவர்களுக்கு பெண் பிடித்து போயிற்று. நமக்கும், குடும்பம் பிடித்துப் போனது. மாப்பிள்ளையோ சிங்கப்பூர். குறிப்பிட்ட தேதிக்குள் நம் சம்மதம் தெரிவிக்க வேண்டிய சூழல்.( மாதம், நாள்,கிழமை இப்படியாக) கையும் காலும் ஓடாத சூழல். மாப்பிள்ளையை நாமும் பார்க்க வேணும். இல்லையா? சிங்கையில் உறவினர்கள் இருந்தார்கள்.

அவர்களை கூப்பிட்டு, நிலை விளக்கி பொருந்துவதற்குள் பொருந்தினார்கள் நம் பதிவ நண்பர்கள்.

முறை வச்சு, மாமாவென அழைக்கும் கண்ணன் என்ற மனவிழி சத்ரியன் மற்றும் சி. கருணாகரசு!

"மாமா, இது எங்க டூட்டி மாமா. எதுக்கு வருந்துரீறு?" என்று மறுநாளே போய் மாப்பிள்ளையை பார்த்து வந்தார்கள். சம்மதம் சொன்னார்கள்.சம்மதம் சொன்னோம். நிச்சயதார்த்தம் முடிந்தது.

விலை மதிப்பற்ற எவ்வளவோ நண்பர்களையும் உறவுகளையும் இந்த ஒரு வருடத்திற்குள் தேடி தந்திருக்கிறது, கருவேல நிழல்!

கவிதை எல்லாம் சும்மா மக்கா.

எவ்வளவோ உன்னதமான கவிஞர்களை இதே பதிவுலகில் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். போடா மயிறு என்று முகத்தில் அறைகிறார்கள், கவிதையில்.

பொறவு,

எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கிடைச்சது?

அன்புதானே மக்கா?

எதிர்பார்ப்புகள் அற்ற, பிரதி பலன் கருதாத நண்பர்களை/ உறவுகளை தேடி தந்திருக்கிறது கருவேல நிழல் என்ற பதிவுலகம்!

வெறும் கோபமும், துவேஷமும் மட்டும் நிரம்பியதில்லை இப்பதிவுலகம் என இச்சூழலில் பதிய விரும்புகிறேன்.
***

முழங்காலுக்கு கீழாக
பார்த்திருக்கிறேன்
செடியில் இம்மரத்தை என
நினைவு வந்த போது
அதன் முழங்கால் நிழலில் இருந்தேன்.

***

இப்படியாக இரண்டாவது வருடத்தை தொடங்குகிறேன். அதாவது, தொடங்குகிறோம்!..

நன்றியும் அன்பும் மக்களே!

***

Thursday, June 3, 2010

தோழி


(Picture by cc licence, Thanks Akash_Kurdekar)

ஹென்றி வாத்தியார்தான்
துப்பாக்கி சுட சொல்லித்தந்தார்.

முதல் என்பதால்
பெட்டை கொக்கு சுடுவது
வேட்டைக்காரன் சாஸ்த்திரம் என்றார்.

காடு, வயல்
வயல்க் காடென
பெட்டை கொக்கு தேடி
சுற்றி அழைத்தார்.

கொக்கை கண்டதும்
பெட்டைதான் சுடு என்றார்.

சுட்டதும் பறந்த
கொக்கை பார்த்ததும்
மல்லிகா நினைவு வந்தாள்.

தீபாவளி துப்பாக்கிக்கே
செத்து செத்து விழும் மல்லிகா.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!