
வீடு வருவேன்.
அன்பையும்
ஆக்கி வைத்திருப்பாய்.
குழந்தைகள் குறித்து
கேட்டாலும்
"முதலில் சாப்பிடுடா"
என
சிரிப்பு தருவாய்.
எங்கிருந்து எடுத்தாயோ
இந்த
எண்ணெய் கத்திரி
குழம்பை.
காய்ச்சல் கருமாதிக்கு
தலை தடவி
மார்பிறுக்குவாய்.
உடல்சூடு
ஒரு
மருந்தென்பாய்.
குடி
கூடிய
உபத்திரவத்தையும்
குழந்தைகள் பார்க்கவேணாமே
என
கையேந்துவாய்.
கூட கூட
திரியும் குறிப்புணர்ந்து
"இந்த மசுரை சொல்லு உனக்கு"
என
மன முறிப்பாய்.
வெளியில் இருந்து
பார்க்கிறேன்.
வீடு தெரிகிறது.
உள்
நுழைந்த பிறகு
வெளியறிய காணோமே...
என்ன ஜென்மமோ
நீ
என்
யம்மோவ்..

