Monday, October 26, 2009

என்ன கொடுமை சார் இது


(picture by cc licence, thanks RubensLP)

ச்சசல் அண்ணன்
மாதிரி இருந்ததால்
மறைத்துக்கொள்கிறேன்
புகையும் சிகரெட்டை
கைகளுக்குள்.

வரும் புன்னகைத்து
கடந்து போகிறார்.

ண்ணனா
அண்ணன் மாதிரியா
என்கிற
கேள்வி மறைந்து
புன்னகையா
புன்னகை மாதிரியா
என்கிற கேள்வியில்
புகைந்து கொண்டிருந்தேன்.

சிகரெட் மாதிரி.

Saturday, October 24, 2009

பா.ராஜாராம் கவிதைகள்-4

1.
(picture by cc license, thanks seeveeaar)

வாடாவென அழைக்கிறது
உள்ளிருக்கும் கடவுள்.
மிதித்துப்போக வலிக்கிறது
கோபுர நிழல்.

2.
(picture by cc license, thanks fesoj)

ரட்டை பாப்பாத்தி
இருந்தமர்ந்து
எழுந்த பூ
ஆடிக்கொண்டிருக்கிறது
கட்டிலையொத்து.

3.
(picture by cc license, thanks appaji)

டுவழி மைல் கல்
சொல்கிறதெப்போதும்...
புறப்பட்ட தூரத்தை
போகும் தொலைவை
இனம் புரியாதொரு
அனாதரவை.

------------------------------------------
பா.ராஜாராம் கவிதைகள் 1, 2, 3
------------------------------------------