Thursday, April 22, 2010

அவரவர் பா(ட்)டு


(Picture by cc license Thanks itchys )

"னியனே,
விருந்து சொல்ல
உனக்கு வேறு வீடா கிடைக்கலை?"
என இரைந்து கொண்டிருந்தாள்
வெஞ்சனத்துக்கு
முருங்கை ஒடித்துக் கொண்டிருந்தவள்.

"பார்த்துடி,
முட்டை இருக்கு"
என கரைந்து கொண்டிருந்தது
ஓட்டுத்தாவர காகம்.

--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!


Monday, April 19, 2010

விருதோம்பல்-ஒன்று


நண்பர் அக்பர் பகிர்ந்தளித்த விருது இது.சுணங்கிப் போச்சு அக்பர் பகிர்ந்து கொள்ள...

நன்பன் தெய்வா வங்கியில் பணி புரிகிறான்.வாழ்த்து அட்டைகள் வாங்க அவனிடம் காசு இருக்கும்.ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்...

சகோதரி லக்ஷ்மிக்கு(தெய்வா மனைவி) ரெண்டு குழந்தைகள்.குனியநிமிர, குழந்தைகளை பராமரிக்க,என நேரம் சரியாகவே இருக்கலாம்.ஆனால் இத்துடன் நின்று விட மாட்டார்கள்,லக்ஷ்மியும்...

அழகழகு வாழ்த்து அட்டை செய்வார்கள்.அந்த வாழ்த்து அட்டையைத்தான் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பான் தெய்வா.

குடும்பத்தோடு வாழ்த்து சொல்ல,பிரியத்தை காட்ட எவ்வளவு உன்னதமான மொழி இது!

போலவே,வலை உலகிலும் இப்படி ஒரு உன்னத மொழியை உணர்ந்து வருகிறேன்..

ஒருவர் ஒரு விருதை உருவாக்குகிறார்.தன்னை தைத்த நாலு நண்பர்களுக்கு அல்லது நபர்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.தன்னை போலவே நண்பர்களையும் பணிக்கிறார்.

வார்த்தை போதாமலும்,அன்பின் அழுத்தத்தை தாங்க இயலாமலும்,எதிரில் பேசிக் கொண்டிருப்பவரின்
கைகளை தன்னிச்சியாக பற்றும் செயலாகவே கருதுகிறேன்-இதையும்.

அப்படி,

அக்பரின் அன்பில் தோய்ந்த இவ்விருதை அவ்வன்பு மாறாமல் இவர்களுக்கு கடத்துகிறேன்.அந்த இவர்கள்...


1. இரசிகை

2.அம்பிகா

3.பத்மா.

4.பிரேமா மகள்.

5. Matangi Mawley

6.kutipaiya

7.சே.குமார்

8.இராமசாமி கண்ணன்.

9.ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி.

10. shakthikumar

11.பனித்துளி சங்கர்.

இன்னும் மிக,மிக பிடித்த என நிறைய...ஆனால் போதும்.

அக்பரின் அன்பு மற்றவரின் மூலமாக மற்றவர்களுக்கும் சேரட்டும்.நன்றி அக்பர்!

**