
(Picture by cc licence, Thanks mckaysavage)
அம்மா சத்தியமாய்
என்று தொடங்கியது பிறகு
ஐயப்பன் சத்தியமாய் என்று
மாறியிருக்கிறது.
குலசாமி பொதுவா என்று
சொல்ல நேர்ந்ததும் உண்டு.
பிள்ளைகள் அறிய என்று
மனைவியிடமும்
அம்மா சத்தியமாய் என்று
குழந்தைகளிடமும்
கூறி வருகிறேன்.
அப்பவும், இப்பவும்
எங்கு தவறு நேர்கிறது என
அறிய இயலவில்லையே ஆஞ்சனேயா?
"ஆஞ்சனேயா?"
"ஆஞ்சி?"
எஸ்கேப் போல.