Monday, April 19, 2010

விருதோம்பல்-ஒன்று


நண்பர் அக்பர் பகிர்ந்தளித்த விருது இது.சுணங்கிப் போச்சு அக்பர் பகிர்ந்து கொள்ள...

நன்பன் தெய்வா வங்கியில் பணி புரிகிறான்.வாழ்த்து அட்டைகள் வாங்க அவனிடம் காசு இருக்கும்.ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்...

சகோதரி லக்ஷ்மிக்கு(தெய்வா மனைவி) ரெண்டு குழந்தைகள்.குனியநிமிர, குழந்தைகளை பராமரிக்க,என நேரம் சரியாகவே இருக்கலாம்.ஆனால் இத்துடன் நின்று விட மாட்டார்கள்,லக்ஷ்மியும்...

அழகழகு வாழ்த்து அட்டை செய்வார்கள்.அந்த வாழ்த்து அட்டையைத்தான் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பான் தெய்வா.

குடும்பத்தோடு வாழ்த்து சொல்ல,பிரியத்தை காட்ட எவ்வளவு உன்னதமான மொழி இது!

போலவே,வலை உலகிலும் இப்படி ஒரு உன்னத மொழியை உணர்ந்து வருகிறேன்..

ஒருவர் ஒரு விருதை உருவாக்குகிறார்.தன்னை தைத்த நாலு நண்பர்களுக்கு அல்லது நபர்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.தன்னை போலவே நண்பர்களையும் பணிக்கிறார்.

வார்த்தை போதாமலும்,அன்பின் அழுத்தத்தை தாங்க இயலாமலும்,எதிரில் பேசிக் கொண்டிருப்பவரின்
கைகளை தன்னிச்சியாக பற்றும் செயலாகவே கருதுகிறேன்-இதையும்.

அப்படி,

அக்பரின் அன்பில் தோய்ந்த இவ்விருதை அவ்வன்பு மாறாமல் இவர்களுக்கு கடத்துகிறேன்.அந்த இவர்கள்...


1. இரசிகை

2.அம்பிகா

3.பத்மா.

4.பிரேமா மகள்.

5. Matangi Mawley

6.kutipaiya

7.சே.குமார்

8.இராமசாமி கண்ணன்.

9.ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி.

10. shakthikumar

11.பனித்துளி சங்கர்.

இன்னும் மிக,மிக பிடித்த என நிறைய...ஆனால் போதும்.

அக்பரின் அன்பு மற்றவரின் மூலமாக மற்றவர்களுக்கும் சேரட்டும்.நன்றி அக்பர்!

**

33 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான பகிர்வு பா.ரா சார்..

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

கவிதன் said...

வாழ்த்துக்கள் அண்ணா!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும், பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.

RaGhaV said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.. :-))

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் விருது பெற்ற உங்களுக்கும், மற்றவர்களுக்கும்...

காமராஜ் said...

வந்தாச்சா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூமி குலுங்கியது.ஆஹா பாரா பாரிவேட்டைக்கு கெளம்பியாச்சுன்னு நெனச்சேன்.அப்படியே ஆனது.நல்லா இருக்கியா நண்பா?.

இரசிகை said...

nantriyum...
anbum:)

viruthu petra matravarkalukkum vaazhthukal!!

vasu balaji said...

வாழ்த்துகள் உங்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும்:)

க.பாலாசி said...

இதுவும் கவிதைதான்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துகள் உங்களுக்கும், உங்களிடமிருந்து விருந்தோம்பலை வாங்கிக்கொண்டவர்களுக்கும்.

Vidhoosh said...

வைர மோதிரம் வாங்கிட்டீங்களா... வாழ்த்துக்கள் பாரா-ண்ணே.

குட்டு வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள் :))

சத்ரியன் said...

வாழ்த்துகள்.

க ரா said...

நன்றி பா.ரா. சார். விருது கொடுத்தமைக்கு.

நேசமித்ரன் said...

விருதோம்பல்... அதில் புதியவர்களை ஊக்குவிக்கும் பா.ரா குணம் .!!!!

வாழ்த்துகள் மக்கா

நல்ல படைப்புகள் வெளி வரட்டும்

மொக்கைகள் சுவாரஸ்யமானவை ஆனால்
மொக்கைகள் பென்ச் மார்க் அல்ல


:)

பனித்துளி சங்கர் said...

ஆஹா ! எனக்கும் விருது கொடுத்து இருக்கிறீர்களே .மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் . விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thamira said...

தந்தவருக்கும், பெற்றவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.

Unknown said...

உருவாக்கியவருக்கும், தந்தவருக்கும் பெற்றவர்களுக்கும் பாராட்டுகள்..

sathishsangkavi.blogspot.com said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

அம்பிகா said...

அன்பு சகோதரர் பா.ரா. விடம் இருந்து விருது. சந்தோஷமாய் இருக்கிறது. அன்பும், நன்றிகளும்.

விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இளமுருகன் said...

விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

இளமுருகன்
நைஜீரியா

Chitra said...

வாழ்த்துக்கள்!!!

உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

இதுவும் கவிதைதான்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

குட்டிப்பையா|Kutipaiya said...

விருதுக்கு நன்றி்களும் நேசங்களும் பா.ரா...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்.

Jackiesekar said...

நான் போட்ட பின்னுட்டத்தை காணவே இல்லை

சிநேகிதன் அக்பர் said...

//அழகழகு வாழ்த்து அட்டை செய்வார்கள்.அந்த வாழ்த்து அட்டையைத்தான் நண்பர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பான் தெய்வா.

குடும்பத்தோடு வாழ்த்து சொல்ல,பிரியத்தை காட்ட எவ்வளவு உன்னதமான மொழி இது!//

ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணே.

எனது அன்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

விருது பெற்ற உங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

விநாயக முருகன் said...

வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன் பா.ரா.
அப்பாடா என் வயசை குறைச்சாச்சு

கே. பி. ஜனா... said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

பிரேமா மகள் said...

நன்றி... விருதெல்லாம் தர்றீங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...எனக்கும் ஒரு விருதா? என்ன பாக்யம் செய்தனை? விருதுக்கு நன்றி!

பத்மா said...

மிகவும் நன்றி பா ரா சார் .ரொம்ப சந்தோஷமா இருக்கு

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,

ஓய்வில்லாத வேலை,மற்றும் அலைச்சல்.

ஓயும் போது கை பற்றுவேன்.மிக்க நன்றி மக்களே!