
(Picture by cc licence, Thanks Mckaysavage)
நடக்க முடியாத காரணம் காட்டி
கோவில் திருமணம் காரியத்திற்கு
வீட்டிலேயே விட்டுப் போய் விடுகிறார்கள்.
குழந்தைகளை பார்த்துக் கொள்ள
என் கிழவியும் வேணும் போல.
சாப்பாட்டிற்கு
கட்டி வைத்த இட்லி துவையல்.
பேச்சுத் துணைக்கு
பேப்பரும் அணிலும்
மைனாவும் குருவியும்.
பின் மதியத்தில் மட்டும்
அடங்காத ஒரு சுவராசியம்.
புறக்கணிப்பும் உதாசினமும்
குளிரக் குளிர..
திண்ணையில் நின்றபடி
சிறுநீர் கழிக்கலாம்.
***
நன்றி அதீதம்