
தெருவோரத்தில்
இருக்கிறோம்
என
தெரியாமலே
இருக்கிறோம்.
மழை
காற்று
வெயில்
பனி
போல
வாழ்ந்து பார்க்க
ப்ரியமெனில்
முறுக்கு மீசை
மழித்தவிழ்த்து
வாடா
கடவுள்
தெருவோரம்.
இரண்டு:
பீத்துணி
கசக்கி
ப்ரியத்தில்
முகரும்
எட்டாவது மகள்
கருப்பாயிக்கு
ஏன்டா கடவுள்
தரலை
பூப்பும்
காய்ப்பும்?

