
"அப்பா இன்னும் வரலை"
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வீட்டினுள்
இருந்தபடி.
"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.
கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...
தகப்பனாய்
இருப்பது.
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...