
பர்ஸ் எடுத்து
வைத்து கொண்டாள்.
மொத்த சேலைகளையும்
கூடைப்பையில் திணித்து கொண்டாள்.
பாவாடை பிரிலை
அவசரமாக உள் நுழைத்தாள்.
குழந்தைக்கான கவுனில்
எதெது அவன் எடுத்தது என
குழப்பத்துடன் திணித்து கொண்டாள்.
விளக்கு பொருத்தி
சாமி பார்த்தாள்.
கண்ணீர் பெருக்கெடுத்தது.
கதவு பூட்டி
சாவி எடுத்தாள்.
அவன் வந்து கொண்டிருந்தான்.
வாழை இலையில்
பொதிந்த பூவுடன்.
திண்ணையில் அமர்ந்து
மீண்டும் அழ தொடங்கினாள்.

