Wednesday, April 28, 2010

தொடங்கி முடிவன


(Picture by cc licence, thanks Manish Bansal)

ஒன்று

ழை பிடிக்குமா?
குழந்தைகள்?
பட்டம் ஏன் பறக்குது தெரியுமா?
மருதாணிக்கு இங்கிலீஸ்ல என்ன?
சிகரெட் பிடிப்பீங்களா?
கவிதை எழுதும் போதுமா?
என்றவள்,
பேசாமல் உங்களையே
லவ் பண்ணியிருக்கலாம்.
என்றாள்.

இரண்டு

வெள்ளியோடு வெள்ளி எட்டு
சனி ஒம்போது நாளாச்சு,
கோபமாய் நீ பேசாமல் இருந்து.
என்று பேசும்போது புலம்புகிறாய்.
இடையில் கிடந்த,
சனி,ஞாயிறு,திங்கள்,
செவ்வாய்,புதன்,வியாழன்,
வெள்ளி,சனியை..
எப்படி இப்படி தாண்டிப் போகிறாய்?

மூன்று

குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே
நிலவை பார்த்தாள்.
நினைத்துக் கொண்டார் போல
பாலா என்றாள்.
குழந்தை திரும்பியது.
உன்னை இல்லைடாவென
கண் நிறைந்தாள்.

Sunday, April 25, 2010

நண்பர்கள்@ஆண்டிமடம்.காம்


(picture by cc licence, thanks Procsilas)

ப்ப தொடங்கப் போகிறாய்?
என்றுதான் தொடங்கினார்கள்.

தொடக்கத்தில் மலைப்பாக இருக்கும்.
பிறகு அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்
என்று ஊக்கினார்கள்.

ளாளுக்கு எதையாவது சொல்வார்கள்.
இந்தக் காதில் வாங்கி
அந்தக் காதில் விடுவது நல்லது
என்று வேறு ஆற்றுப் படுத்தினார்கள்.

செய்வது என
முடிவு செய்து விட்டால்
முட்டித் தூக்கணும் போல.

ங்களிடம் சொல்ல
ஒன்று விட்டுப் போயிற்று

முன்னதாக,
எதையாவது தொடங்கணும்.
எதை தொடங்கலாம்?
என்று கேட்டதற்குத்தான்...

ப்ப தொடங்கப் போகிறாய்?
என்று தொடங்கினார்கள்.