
(Picture by cc licence, Thanks Akash_Kurdekar)
ஹென்றி வாத்தியார்தான்
துப்பாக்கி சுட சொல்லித்தந்தார்.
முதல் என்பதால்
பெட்டை கொக்கு சுடுவது
வேட்டைக்காரன் சாஸ்த்திரம் என்றார்.
காடு, வயல்
வயல்க் காடென
பெட்டை கொக்கு தேடி
சுற்றி அழைத்தார்.
கொக்கை கண்டதும்
பெட்டைதான் சுடு என்றார்.
சுட்டதும் பறந்த
கொக்கை பார்த்ததும்
மல்லிகா நினைவு வந்தாள்.
தீபாவளி துப்பாக்கிக்கே
செத்து செத்து விழும் மல்லிகா.
--ஆனந்த விகடன். (இந்த வாரம்)
நன்றி சுகுணா,விகடன்!




