Monday, June 15, 2009

சரசு அத்தை

(ஆனந்தவிகடனில் பிரசுரமான எனது படைப்பு)


முன்பொரு சமயம்

சரசு அத்தை கண் பொத்துவாள்

எல்லோரும் ஒளிந்துகொள்வோம்

இவள் உட்பட...

" பிச்சிபூவே பிச்சிபூவே மெல்ல வந்து கிள்ளி போ"

பிச்சிபூவும் கிள்ளாமல் கிள்ளிப்போகும் !

அது என்ன வகை என்று

அறியாது கழியும் காலாண்டு விடுமுறை.


குளியலறை, சமையலறை, சாமியறை,

மாடிப்படி தாழ்வாரம், என

எவ்வளவோ இருக்கிறது

இவளை சுவாசித்தபடி ஒளிந் இடங்கள்!

அது என்ன வகை என்று

அறிந்தே கழியும் அரையாண்டு விடுமுறை.


முழு ஆண்டு விடுமுறை

அறுபது நாட்கள்

அத்தையின் வீடே

ஆடித்தான் அடங்கும்


பிறகுக்கு பிறகு

ஒரு பிறகு வந்தது...

அதில்...

அப்பாவும் மாமாவும் முறுக்கி கொண்டார்கள்.

அம்மாவும் அத்தையும் பேசுவதே இல்லை

எங்காவது, எப்பொழுதாவது

அத்தையை காண்கையில்,

சேலைத்தலைப்பை இழுத்துபோர்த்தியபடி

"வாங்க தம்பி" என்கிறாள்

சரசு அத்தை.

என்று நான் அத்தைக்கு

தம்பியானேனோ

அன்று தொலைந்தது

எல்லாம்!

Friday, June 12, 2009

வலி

ம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கறுத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படி போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு.
ஏன் இப்படி போனாள்
என்று தெரியும் எனக்கு.
எனக்கு தெரியும் என்று
அம்மாவிற்கும் தெரியும்!

பிறகெதெற்கு தூசிப்புயல்?

ரேசன்கடை வரிசையில்,
கோயில் மடப்பள்ளியில்,
தெருவில்,
அம்மாவை இப்படி
காண்கையில் ஆடுதசை ஆடுகிறது...

பேசாமல்,
பெண் குழந்தையாய் பிறந்திருக்கலாம்
நானும்...

வளின் சொல்லைவிட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும்
எனக்கும்.

(கணையாழில் பிரசுரமான எனது படைப்பு)