அம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கறுத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படி போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு.
ஏன் இப்படி போனாள்
என்று தெரியும் எனக்கு.
எனக்கு தெரியும் என்று
அம்மாவிற்கும் தெரியும்!
பிறகெதெற்கு தூசிப்புயல்?
ரேசன்கடை வரிசையில்,
கோயில் மடப்பள்ளியில்,
தெருவில்,
அம்மாவை இப்படி
காண்கையில் ஆடுதசை ஆடுகிறது...
பேசாமல்,
பெண் குழந்தையாய் பிறந்திருக்கலாம்
நானும்...
அவளின் சொல்லைவிட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும்
எனக்கும்.
(கணையாழில் பிரசுரமான எனது படைப்பு)
6 comments:
சத்தியமான உண்மை.
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
//அவளின் சொல்லைவிட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும்
எனக்கும்//
இந்த வரிகள் ’அந்த வலி’யை அனுபவிச்சவுங்களுக்கு மருந்து
ஆமாம்தானே அமிர்தம்!..
தொடர்ந்து பின்னூட்டம் இடுகிறீர்கள்
அன்பும் நன்றியும்..
ஏதேதோ உணர்வுகள்...
-ப்ரியமுடன்
சேரல்
நன்றியும் அன்பும் சேரல்.
Post a Comment