Wednesday, June 17, 2009

மூன்று காலங்கள்




காலம் ஒன்று
நீ தினம் நடக்கிற
சாலையில் இருந்ததென் மரம்.

திர்படும் எல்லாவற்றையும்
கடப்பதுபோல் என் நிழலை
நீ தாண்டுவது இல்லை.

ரு புன்முறுவல்...
ஒரு உடல் சிலிர்ப்பு...
ஒரு ஆசுவாசம்...

டக்கிறபோதும்
கடக்கிறபோதும்
தந்து செல்வாய்.

ழை குறித்த நினைப்பு
பெரிதொன்றும் இல்லாது
பஞ்சம் பிழைத்து
கொண்டதென் மரம்!

காலம் இரண்டு
நிறம் மங்கிய ஐஸ் குச்சி...
சிணுங்கி உடைத்த கண்ணாடி வளையல்...
தங்கி சுகித்த லாட்ஜ் ரசீது...
பாதிகிழித்த திரையரங்கு நுழைவுசீட்டு...
குறுஞ்சி மலையாண்டவரின்
குங்கும பிரசாதம்.... என,
கைபையில் சேகரித்த எல்லாவற்றையும்
"நல்லவேளை மறக்க தெரிஞ்சேன்" என்றபடி
கைகளில் திணிச்சு செல்வாய் நீ!
விடை பெரும்போது தரும்
வலி மிகுந்த சிரிப்பையும் சேகரித்து
பத்திரபடுத்த திரும்புவேன் நான்!

காலம் மூன்று
தூரம் அதிகமாகி போச்சு.
தவறு உனதா எனதா
அருதியிடமுடியவில்லை.

வேண்டவும் வேண்டாம்.

சொல்லிற்கும் பேச்சிற்க்கும்
அப்பாற்பட்டதான ஒரு விஷயம்
இடையோடுவதை யறிவாய் நீ.
நானும்தான்.

நீயும் அறியும்படி
அல்லது
உணரும்படி
பொய்யொன்றும் இல்லை
என்னிடம்.

ன்றாலும்...

வறு நேர்ந்ததற்காக
ஏழு ஜென்மத்து ஏக்கங்களும் உள்ளது.

ரே ஒரு ஜென்மமும்
ஒரே ஒரு வாழ்வும்
போதுமென பேசியிருந்திருக்கலாம்
வசந்த காலங்களில்
நாம்!

6 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆழகு ... (.....)

பா.ராஜாராம் said...

வருகைக்கு நன்றி திரு. நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார்.

கவிதாசிவகுமார் said...

கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை,அழகு,அற்புதம்.வாழ்த்துக்கள்.

http//azutham.blogsot.com said...

வாஸ்தவம்தான்

ஒளியவன் said...

//
இடையோடுகிரதையரிவாய்
//

கவனிக்க!

பா.ராஜாராம் said...

கவனிக்க ஆள் இருந்தால்
போதும்.திருந்த வாய்ப்பிருக்கிறது.
மிகுந்த உற்சாகம் ஒளியவன்...