Showing posts with label ஜன்னல். Show all posts
Showing posts with label ஜன்னல். Show all posts

Saturday, July 4, 2009

ஜன்னல் வைத்த வீடு



(கணையாழியில் வெளியான எனது கவிதை)

ங்கே இங்கே கடன் வாங்கி
அப்பா கட்டினார் வீடொன்று.
செங்கல் சாந்து கடனோடு
வளர்ந்து நின்ற பூதமது.

ண்ணா இட்ட கட்டளைக்கு
சுளித்து சிரித்தது மாடியறை.

"வனுக்கு மட்டும் ஆசை இருக்காதா?"
தவழ தொடங்கிய தம்பிக்காக
அம்மா வந்தாள் அப்பாவிடம்.

"டுத்தாத்துக்கு போறவளுக்கு
என்ன இருக்கு நம் வீட்டில்"
அப்பா அம்மா முதற்கொண்டு
அண்ணா வரையில் சொன்னாலும்...

ப்பா கட்டிய பூதத்தில்
அழகே அழகு ஒன்றுதான்...

க்ரகாரம் முழுக்க தெரியும்
தெருவை பார்த்த ஜன்னல் அது!